Saturday, August 10, 2019

Temple 32 Sankaran Kovil, Tamilnadu, India

ஆதியில் இத்தலத்திற்கு வடக்கில் 7 மைல் தூரத்திலுள்ள கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் ஸ்வாமி கோவிலுக்குச் சொந்தமாக புன்னைவனத்தில் இவ்விடத்தில் ஒரு பூந்தோட்டம் இருந்தது. இத்தோட்டத்திற்கு காவல் இருந்த காவற்பறையன் என்பவன் அங்கிருந்த புற்று ஒன்றை வெட்ட, அதிலிருந்த ஓரூ பாம்பின் வால் வெட்டப்பட்டு அதன் அருகில் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். திருநெல்வேலி அருகில் மணலூரில் அரசாண்டு வந்த உக்கிர பாண்டியர் என்ற மன்னரிடம் , காவற்பறையன் இதைத் தெரிவித்தான். மன்னனும் , அவனுடன் சென்று புற்றினையும் , புற்றிடங்கொண்டாரையும் , வால் வெட்டுப்பட்ட பாம்பினையும் கண்ட போது , இறைவன் அசரீரி மூலம் ஆணை தர, மன்னனும் அவ்விடத்தில் கோவில் கட்டி சங்கரன் கோவில் ஊரை உருவாக்கினார். காவற்பறையான் மற்றும் இம்மன்னனின் திருவுருவங்களை இக்கோவில் தூண்களில் காணலாம். அப்பொழுது கரிவலம் வந்த நல்லூரை அரசாண்டு வந்த பிரகத்துவச பாண்டியன் என்பவனும் இக்கோவிலை பெரியதாக்கி திருப்பணி செய்தான்.தற்போது கிடைத்துள்ள கல்வெட்டுகளிலிருந்து உக்கிர`பாண்டியனமன்னன் இக்கோவிலைச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டியதாகத் தெரிகிறது.

சமய ஒற்றுமை

இக்கோவிலில் சங்கரனார் மற்றும் கோமதியம்மைக்கு மட்டுமே இரண்டு சந்நிதிகள் , தெருவிலிருந்து நேரே தரிசிக்குமாறு இரண்டு பெரும் வாயில்களுடன் அமைந்துள்ளது. ஆனால் நடுவில் உள்ள சங்கர நாராயணருக்கு தலைவாசல் ஒன்று இல்லாதபடி உள்ளடங்கியே உள்ளது. மேலும் அம்மையின் வேண்டுதல் படி இறைவன் சங்கரநாராயணராகக் காட்சி கொடுத்தமையால் சங்கரநாராயணர்த் திருக்கோவில் பின்னால் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுள்ளது. வைணவப் பெரியார் இராமானுசர் மற்றும் வீர வைணவர்களான விஜயநகர மன்னர்கள் காலத்திலும், .திருமாலுக்கு இக்கோவிலோடு தொடர்பினை உண்டாக்கி இரண்டு பெருந் தெய்வங்களும் இணைந்ததே சங்கரநாராயணர் என்று உருவாக்கிவிட்டனர் என்பர்.
பரமேஸ்வரன் தன்னுள் அடங்கிய நாராயணரை வெளிப்படையாகத் தனது இடது பாகத்தில் காட்டி அருளினாரா ? அல்லது சிவன், திருமால் என்ற இரண்டு பெருந் தெய்வங்களும் இணைந்ததால் சங்கரநாராயணரா ? எது எப்படியிருப்பினும் , தற்காலத்திற்கு மிகவும் அவசியமான சமய ஒற்றுமைக்கு இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி மக்களை நல்வழிப்படுத்தி வருகிறது. என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை . தமிழ்நாட்டில் சங்கரநாராயணருக்கு தனிக்கோவிலாக அமைந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடும் ஒரே திருக்கோவில் இதுவேயாகும்.

புராண வரலாறு

சிவனிடத்தில் உமா தேவியார் , சங்கர நாராயணன் திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என்று பிரார்த்திக்க , இவ்விடம் சென்று தவம் செய்ய சிவனும் ஆணையிட்டார். உமா தேவியாரும் இவ்விடம் வர உடன் வந்த தேவர்கள் புண்ணை மர விருட்சங்களாகவும் , உடன் வந்த தெய்வ பெண்கள் பசுக்களாகவும் , உடன் வந்த முனிவர்கள் ஆதி சைவர்களான பட்டமார்களாகவும் மாற, இத்தலத்தில் உமா தேவியார் நெடுங்காலம் தவம் செய்து அருளினார். சிவபெருமானும் , இப்புன்னைவன சேத்திரமடைந்து ஒரு ஆடி மாதம் பௌர்ணமியன்று உமா தேவியாருக்கு சங்கர நாராயணராகத் திருக்காட்சி கொடுத்தார். உமா தேவியார் திரும்பவும் வேண்டிக் கொள்ள , சிவபெருமான் , சிவலிங்க வடிவமாகக் காட்சி கொடுத்து , இப்புன்னை வனத்திலேயே உமா தேவியாருடன் நிரந்தரமாக தங்கியருளினார்.

பிரார்த்தனைத் தலம்


இத்தலம் தென் கிழக்கு தமிழக மக்களின் ஒரு பிரார்த்தனை தலம் ஆகும். பாம்பு , தேள் போன்ற சிறு விஷ ஜந்துக்களிலிருந்து நமக்கு துன்பம் வராதிருக்க பிராணிகளின் வெள்ளியிலான உருவங்களை வாங்கி உண்டியலில் செலுத்துவர். இங்கு கிடைக்கும் புற்று மண்ணைக் கரைத்துப் பூசினால் தோல் வியாதிகள் நீங்குவது யாவரும் அறிந்ததே. இத்தலத்திற்கு வந்து நாகசுனையில் மூழ்கி முறையாக வழிபடுவோர் குட்டம் , குன்மம் முதலிய தீராத நோய்களிலிருந்து விடுபட்டு நலம் பெறுகின்றனர்.

Temple 31 : Kalugasalamoorthy Temple


Constructed in the Dravidian style of architecture, thetemple is believed to have been expanded during the 18th century with the images excavated from Kalugumalai. The core temple has a rock-cut architecture exemplary of early Pandyan Art. 

As per Hindu legend, the temple is associated with the period of RamayanaRavana, the demon king, while abducting Sita, the consort of Rama, killed Jatayu, the eagle. Rama did the final rites for Jatayu, who informed Rama about the abduction before his life ended. Jatayu's brother Sambathi, who was also called Kazhugumahamunivar, was worried about the repercussions of him not doing his karma, the final rites of his brother. Rama advised him to do his penance at Gajamukaparvatham and taking holy dip in the tank. Ages passed by and the time arrived when Muruga was pursuing to slay Surapadman, another demon. Tharukasuran, the brother of Surapadman, was troubling the sages in the region. Murugan slayed Tharukasuran and was resting at Kazhugumalai. Sambathi was assisting Murugan and he also indicated the hideout of Surapadman, whom Murugan slayed subsequently. Pleased with his devotion, Murugan gave salvation. The place came to be known as Kazhugumalai since the sage Kazhugumahamunivar resided here.