Friday, December 30, 2016

'மாபெரும் புரட்சியாளர் இயேசு பெருமான்!'

யேசு பெருமான் மாபெரும் புரட்சியாளர். அவர் தமது வாழ்நாளில் மற்றவர்களின் எண்ணங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டவராக இருந்தார். அப்போதே மனிதர்கள் பணத்தை ஆராதித்த ஆரம்பித்துவிட்டார்கள். 'எல்லோரும் பணத்துக்கு ஆலவட்டம் சுற்றுகிறார்களே' என்று இயேசு பெருமானும் சுற்றிவிடவில்லை.




ஒரு நாள் அவரைச் சந்திப்பதற்காகப் படிப்பாளி ஒருவன் வந்தான்.

''ஆண்டவரே! நான் சொர்க்கத்தையடைய என்ன செய்ய வேண்டும்?" என்றான். அதற்கு அவர், 'மோசஸ் வழியாக, இறைவன் தந்த பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடித்து வா'' என்றார்.

அவனும், அவரைப் பார்த்து, ''நான் இந்தக் கட்டளைகளை எனது சிறுவயது முதற்கொண்டே கடைப்பிடித்து வருகிறேனே'' என்றான். அப்போது அவர், அவனைப் பார்த்து, ''அப்படியென்றால் நீ செய்ய வேண்டுவது வேறு ஒன்று உள்ளது; உன்னிடத்தில் உள்ளதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு; பிறகு வந்து என்னைப் பின் தொடர்ந்து வா'' என்றார்.

அவனோ கோபித்துக்கொண்டு போனான். அப்போது இயேசு பெருமான் ''இவன் திரும்ப வரமாட்டான். பணக்காரனின் இதயம் பணப்பெட்டியில் பத்திரமாக இருக்கிறது. ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைந்தாலும், பணக்காரன் விண்ணரசில் நுழைவது கடினமானது" என்றார்.

நாளையைக் குறித்து, கவலைப்படுகிறவர்களை அவர் வெகுவாகச் சாடினார்.

''ஆகாயத்து பட்சிகளைப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை; களஞ்சியங்களில் சேர்க்கிறதும் இல்லை. இருந்தும் உங்கள் பரமபிதா அவைகளுக்கும்  உணவளித்து வருகிறார்.

வயல் வெளிகளைப் பாருங்கள். லீலி மலர்களைப் பாருங்கள், சாலமோன் அரசன் முதலாக தனது சர்வ மகிமையிலும், இவைகளில் ஒன்றைப் போலெங்கிலும் உடை உடுத்தியது இல்லை. இன்றைக்கு இருந்து, நாளை அடுப்பிலே போடப்படுகிற காட்டுப்புல்லை கர்த்தர் இவ்வளவாக உடை உடுத்தினால், அற்ப விசுவாசிகளே! உங்களை எவ்வளவாக உடுத்துவார்!

ஆகவே, என்னத்தைக் குடிப்போமென்றும், என்னத்தை உண்போமென்றும், நாளையைக் குறித்து கவலைப்படாது இருங்கள். உங்களுக்கு, என்னென்ன தேவையென்பதை, உங்கள் தந்தையான இறைவன் அறிந்தே வைத்திருக்கிறார். யோசித்துக் கவலைப்படுவதாலே உங்கள் உயரத்துக்கும் மேலே ஒரு முழம் கட்ட உங்களில் எவனாலே ஆகும்? ஆகவே நீங்கள் நாளையைக் குறித்துக் கவலைப்படுவானேன்?" என்று கேட்டார்.

எருசேலம் ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியில் எல்லோரும் காசுகள் போட்டபோது, ஒரு ஏழை விதவை இரண்டு காசுகள் மாத்திரமே போட்டாள். அதைப் பார்த்து இயேசு பெருமான் ''இவர்கள் எல்லோரிலும் இவளே அதிகமாகப் போட்டாள்; ஏனென்றால் மற்றவர்களெல்லாம் தங்களிடத்திலிருந்து, உள்ளதிலிருந்து கொஞ்சமாகப் போட்டார்கள்; ஆனால் இவளோ, தன்னிடத்தில் இருந்ததை எல்லாம் போட்டாள்" என்று குறிப்பிட்டார்.

அவர் ஒரு யூதராக இருந்ததால், யூதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மோசசின் சட்டத்தை அவரும் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று. 'சபாத்' என்கிற ஓய்வு நாளில் எழுபத்திரெண்டு அடி தொலைவுக்கு மேல் நடக்கக் கூடாது என்று அப்போது விதி இருந்தது.
முடவன் ஒருவனைக் குணமாக்கி 'நீ எழுந்து கட்டிலைத் தூக்கிக் கொண்டு நட" என்று இயேசு பெருமான் 'சபாத்' நாளில் குறிப்பிட்டார். நடக்கவே கூடாதென்று விதி இருக்கிறபோது கட்டிலைத் தூக்கிக் கொண்டு நட என்றால் எப்படி?
அர்த்தமில்லாத சடங்குச் சட்டங்களை ஆரவாரத்தோடு தூக்கிக்கொண்டு அலைந்தவர்களுக்கு மத்தியில், இயேசு பெருமான் புரட்சிக்காரராக காணப்பட்டார்.



வேசித்தனத்தில் பிடிபட்ட பெண்ணை, கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது சட்டமாக இருந்தது. விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இயேசு பெருமானுக்கு முன்னாலே கொண்டு வந்தார்கள். ''உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ அவன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்" என்று இயேசுநாதர் குறிப்பிட்டார்.

ஒடுக்கப்பட்ட, புறக்கணிப்புக்கு உள்ளான கலிலேயா, சமாரியா போன்ற இடங்களிலேதான் அவர் அதிகமாகப் பணியாற்றினார். கலிலேயா - ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கொடுக்கப்பட்ட நாடு.

சமாரியப் பெண் ஒருத்தி 'நான் தீண்டத்தகாதவள். என்னிடத்தில் யூதனாக இருக்கிற நீர் எப்படித் தண்ணீர் கேட்கலாம்?' என்று கேட்டபோது, அவளுடைய வாழ்க்கையில் உள்ள மறைபொருள்களை அவர் வெளிப்படுத்தினார். அவளோடன் அவள் தங்கியிருந்த ஊருக்கே சென்றார்.
ஏழைகளுக்கு 'அருட்செய்தி' அறிவிக்க, சிறைப்பட்டோருக்கு விடுதலை தர, பார்வையற்றோருக்குப் பார்வை தர, ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்ய, ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்க அவர் என்னை அனுப்பினார் என்கிற தீர்க்கதரிசனம் அவரால் நிறைவேற்றிற்று.

Tuesday, December 6, 2016

திருவண்ணாமலை கிரிவலமும் அஷ்டலிங்க தரிசனமும்...

மலையே சிவமாகத் திகழும் உன்னதத் தலம் திருவண்ணாமலை திருத்தலம். இங்கே கிரிவலம் வருவது பிரசித்தி பெற்ற வழிபாடு. கிரிவலம் வருவது அக்னிமலையாக விளங்கும் சிவனாரையே வலம் வந்து வழிபடுவதாகும். அதுமட்டுமல்ல, கிரிவலப் பாதையில்  ஐயனின் எட்டு திருவுருவங்களையும் தரிசிக்கலாம். எட்டு திசைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றி அருள்புரிவதற்காகவே ஐயன் எட்டு லிங்கத் திருமேனிகளாக திருக்காட்சி தருகிறார்.
அஷ்டலிங்கங்களையும் வழிபடுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய புண்ணிய பலன்கள்...





































இந்திரலிங்கம்:
கிரிவலப்பாதையில் முதலில் நாம் தரிசிப்பது இந்திரலிங்கம். கிழக்கு திசையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு அதிபதி சூரியனும் சுக்கிரனும் ஆவர். இந்திரலிங்கத்தை தரிசித்து வழிபட்டால், லக்ஷ்மி கடாட்சமும், புகழுடன் கூடிய வாழ்க்கையும் அமையும்.

















அக்னி லிங்கம்:

திருவண்ணாமலை - செங்கம் சாலையில் தாமரைக் குளத்துக்கு அருகில் தென் கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது அக்னி லிங்கம். இந்த திசைக்கு அதிபதி சந்திரன். அக்னி லிங்கத்தை தரிசித்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை, மனச் சஞ்சலம் போன்றவைகள் நீங்குவதுடன் நோயற்ற வாழ்க்கையும் அமையும்






































யமலிங்கம்:
கிரிவலப் பாதையில் 3-வதாக நாம் தரிசிப்பது யமலிங்கம். கோயிலுக்கு அருகிலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. யமலிங்கம் அமைந்திருக்கும் தென் திசைக்கு அதிபதி செவ்வாய். இங்கு ஐயனை தரிசித்து வழிபட்டால், கடன் தொல்லைகள் விலகும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். சகோதரர்களால் நன்மைகள் ஏற்படும்.






































நிருதி லிங்கம்:
கிரிவலப் பாதையில் 4-வதாக நாம் தரிசிப்பது நிருதி லிங்கம். நிருதிலிங்கத்துக்கு முன்பு உள்ள நந்திதேவருக்கு அருகில் இருந்து மலையைப் பார்க்கும்போது, மலையில் சுயம்புவாகத் தோன்றியதுபோல் அமைந்திருக்கும் நந்தியை தரிசிக்கலாம். நிருதிலிங்கம் அமைந்திருக்கும் திசை நிருதி திசை எனப்படும் தென் மேற்கு திசையாகும். இந்த திசைக்கு அதிபதி ராகு. நிருதிலிங்கத்தை வழிபட்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.



வருண லிங்கம்:
மேற்கு திசையில் அமைந்திருப்பது வருணலிங்கம். கோயிலின் அருகிலேயே அமைந்துள்ளது வருண தீர்த்தம். இந்த திசையின் அதிபதி சனி. வருணலிங்கத்தை வழிபட்டால் பொருளும் புகழும் நிறைந்த வாழ்க்கை உண்டாகும். மேலும் தீராத நோய்களில் இருந்து நிவாரணமும் கிடைக்கும்.
















வாயு லிங்கம்:
வாயுமூலை எனப்படும் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதால், வாயுலிங்கம் என திருநாமம் கொண்டுள்ளார் ஐயன். இந்த திசைக்கு அதிபதி கேது. வாயுலிங்கத்தை தரிசித்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை, பொறாமை, கண் திருஷ்டி போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

குபேரலிங்கம்:
குபேரனுக்கு உரிய வடக்கு திசையில் அமைந்திருப்பதால் சிவனார் குபேரலிங்கம் என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இந்த திசைக்கு அதிபதி குரு. குபேரலிங்க மூர்த்தியை வழிபட்டால், செல்வம் பெருகும். மனதில் சாந்தியும் சந்தோஷமும் நிலவும்.
ஈசான்ய லிங்கம்:
வடகிழக்கு திசையில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தம் ஈசான்ய லிங்கம் ஆகும். இந்தக் கோயில் தரைமட்டத்தில் இருந்து சற்று கீழே அமைந்திருக்கும். இந்த திசையின் அதிபதி புதன். இங்கு ஐயனை வழிபட்டால், மனம் ஒருமைப்படும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

Saturday, November 26, 2016

Paadal Petra Sivasthalams situated - In the North of river Kaveri


Location of SivasthalamLord Shiva known as
1. ChidambaramNatarajar
2. TiruvetkalamPasupatheswarar
3. TirunelvoyalUchinatheswarar
4. TirukazhippalaiPaulvannanathar
5. Tirunallur PerumanamSivalogathyagesar
6. TirumayendirapalliTirumeniazhagar
7. ThentirumullaivayilMullaivana Nathar
8. TirukkalikaamurSundareswar
9. TiruchaaikkaduChayavaneswarar
10. TiruppallavaneecharamPallavaneswarar
11. TiruvenkaaduSwetaranyeswarar
12. KeezhaiTirukattupalliAranyaSundareswarar
13. TirukkurukavurVelvidai Nathar
14. SirkazhiBrahmapureesar
15. TirukolakkaThaalamudaiyaar
16. Tirupullirukkuvelur
(Vaitheeswarankovil)
Vaidhyanathar
17. TirukannarkoilKannayiranathar
18. TirukkadaimudiKadaimudinathar
19. TirunindriyurMahalakshminathar
20. TirupunkurSivaloganathar
21. TiruneedurArutsomanatheswarar
22. TiruanniyurAabhathsagayeswarar
23. TiruvelvikudiKalyanaSundarar
24. TiruedirkollpadiAiravatheswarar
25. TirumananjeriArulvallalnathar
26. TirukkurukkaiVeerateswarar
27. TirukaruppariyalurKutramporutha Nathar
28. TirukkurukukkaKonthalanathar
29. TiruvazhkoliputhurMaanickavannar
30. TirumannippadikkaraiNeelakandeswarar
31. TiruvomampuliyurThuyarantheertaNathar
32. TirukkanattumullurPathaanchaliNathar
33. TirunaraiyurSiddhi Natheswarar
34. TirukkadamburAmirthakadesar
35. TiruppandanainallurPasupatinathar
36. TirukanjanurAgneeswarar
37. TirukkodikkaTirukkodeeswarar
38. TirumangalakkudiPraana Natheswarar
39. TiruppanandalThaalavaneswarar
40. TiruaappadiPaalugandha Easwarar
41. TirucheaiynallurSathyagireeswarar
42. TirundudevankudiKarkadeswarar
43. TiruviyalurVilvaaranyeswarar
44. TirukkottaiyurKodeeswarar
45. TiruinnambarEzhuthtarinathar
46. TirupurambayamSatchi Natheswarar
47. TriuvisayamangaiVijayanathar
48. TiruvaikavurVilvavananathar
49. TiruvadakurangaduthuraiKulaivanangunathar
50. TiruppazhanamAabathasagayanathar
51. TiruvaiyaruIyaarappar
52. TiruneithanamNeyyaadiyappar
53. TirupperumpuliyurViyakra Pureesar
54. TirumazhapadiVajrathampanathar
55. TiruppazhuvoorVadamoolanathar
56. TirukkanurSemmeninathar
57. TiruAnbilalanduraiSathyavageeswarar
58. TirumaanduraiAmravananathar
59. TiruppatruraiMoolanathar
60. Tiruvanaikka(Tiruvanaikaval) Jambukeswarar
61. TiruppainjeeliNeelakandeswarar
62. Tiruppaachilasramam (Tiruvasi)Maatrarivaradhar
63. TiruveengoimalaiMaragathachalar


Ariyalur District (2)                                Tirumazhapadi, Tiruppazhuvoor,

Cuddalore District (8)

                               Chidambaram, Tiruvetkalam, Tirunelvayil,
                               Tirukazhippaalai, Tiruvomampuliyur, Tirukkanattumullur,                                              Tirunaraiyur, Tirukkadambur,

Tiruchirapalli District (7)

                                TiruAnbilalandurai, Tirumaandurai, Tiruppatrurai,
                                Tiruvanaikka, Tiruppainjeeli, Tiruppaachilasramam,                                                       Tiruveengoimalai

Nagapattinam District (26)

Tirunallur Perumanam, Tirumayendirapalli, Thentirumullaivayil, Tirukkalikaamur, Tiruchaaikkadu, Tiruppallavaneecharam, Tiruvenkaadu, KeezhaiTirukattupalli, Tirukkurukavur, Sirkazhi, Tirukolakka, Tirupullirukkuvelur (Vaitheeswarankovil), Tirukannarkoil, Tirukkadaimudi, Tirunindriyur, Tirupunkur, Tiruneedur, Tiruanniyur, Tiruvelvikudi, Tiruedirkollpadi, Tirumananjeri, Tirukkurukkai, Tirukaruppariyalur, Tirukkurukukka, Tiruvazhkoliputhur, Tirumannippadikkarai
Thanjavur District (20)
Tiruppandanainallur, Tirukanjanur, Tirukkodikka, Tirumangalakkudi, Tiruppanandal, Tiruaappadi, Tirucheaiynallur, Tirundudevankudi, Tiruviyalur, Tirukkottaiyur, Tiruinnambar, Tirupurambayam, Triuvisayamangai, Tiruvaikavur, Tiruppazhanam, Tiruvadakurangaduthurai, Tiruvaiyaru, Tiruneithanam, Tirupperumpuliyur, Tirukkanur

Paadal Petra Sivasthalams situated to the South of river Kaveri

LocationLord Shiva known as
1. TiruvaatpokkiRathnagirinathar
2. TirukadambanduraiKadambavana Natheswarar
3. TirupparaithuraiParaithurainathar
4. TiruKarkudiUchi Nathar
5. TiruMookkicharam
(Uraiyur, Trichy)
Panchavarneswarar
6. TiruchirapalliThayumanavar
7. TiruErumbiyur (Tiruverumbur)Erumbeesar
8. TirunedungalamNithya Sundarar
9. MelaiTirukkattupalliTheeyadiappar
10. TiruvalampozhilAthmanatheswarar
11. TiruppoonturuthiPushpavana Nathar
12. TirukkandiyurBrahmasirakandeesar
13. TiruchottruthuraiTholaiyaselvanathar
14.TiruvedhikudiVedapureesar
15. TiruThenkudithittaiPasupatheeswarar
16. TiruppullamangaiPasupatheeswarar
17. TiruChakkarappalliAlandurainathar
18. TirukkarukavurMullaivananathar
19. TiruppalaithuraiPalaivananathar
20. TirunallurKalyana Sundareswarar
21. Avoor PasupatheeswaramPasupatheeswarar
22. TiruchattimutthamSivakozhundeeswarar
23. TirupatteeswaramThenupureeswarar
24. Pazhaiyarai VadataliSomeswarar
25. TiruvalanchuzhiKarpaganathar
26. Tirukkudamooku
(Kumbakonam)
Kumbeswarar
27. Tirukkudanthai KeezhkottamNageswaraswamy
28. Tirukkudanthai KaaronamKasiviswanathar
29. TirunageswaramSanbakaranyeswarar
30. TiruvidaimarudurMahalingeswarar
31. ThenkurangaduthuraiAbathsahayanathar
32. TiruneelakudiNeelakandeswarar
33. TiruvaikalMadakovilVaikalnathar
34. Tirunallam (Koneri Rajapuram)Umamaheswarar
35. TirukozhambamKokileswarar
36. TiruvavadutharaiMasilamani Eswarar
37. Tiruthuruthi
(Kuththaalam)
Ukthavedeeswarar
38. TiruvazhundurVedapureeswarar
39. MayiladuthuraiMayuranathar
40. TiruvilanagarThuraikattum Vallalar
41. TirupariyalurVeerateswarar
42. TiruchemponpalliSwarnapureesar
43. TirunanipalliNattrunaiappar
44. TiruvalampuramValampuranathar
45. TiruthalaichangaduSangarunaadeswarar
46. TiruakkurThanthondriyappar
47. TirukkadavurAmirthagateswarar
48. Tirukkadavur MayanamBrahmapureeswarar
49. TiruvettakkudiTirumeniazhagar
50. TiruthelicheriParvatheeswarar
51. TirudharmapuramDharmapureeswarar
52. TirunallaaruDharbaranyeswarar
53. TirukkotaruAiravatheswarar
54. Ambar PerunthirukovilBrahmapureesar
55. Ambar MaakaalamMaakaalanathar
56. TirumeeyachurMuyarchinatheswarar
57. Tirumeeyachur IlankovilSakalaBhuvaneswarar
58. TiruthiladaipathiMadhimutheeswarar
59. TiruppamburamPaambu Pureswarar
60. SirukudiMangaleswarar
61. TiruveezhimizhalaiNethrarbaneswarar
62. Tiru AnniyurAgneeswarar
63. Tirukkaruvili KottittaiSargunatheswarar
64. TiruppenuPerunduraiSivanandeswarar
65. TirunaraiyurSiddhi Nadheswarar
66. ArisirkaraiputhurPadikkasu Alithanathar
67. SivapuramSivapuranathar
68. TirukalayanallurAmrithaKaleswarar
69. TirukkarukkudiSargunalingeswarar
70. TiruvaanchiyamVaanchinathar
71. NannilamMadhuvaneswarar
72. TirukondeeswaramPasupatheeswarar
73. TiruppanaiyurThaalavaneswarar
74. TiruvirkudiVeeratteswarar
75. TiruppugalurAgneeswarar
76. Tiruppugalur VarthamaneecharamVardhamaaneswarar
77. RaamanadeechuramRamanadeswarar
78. TiruppayattrurTiruppayattreeswarar
79. TiruchengattankudiGanapatheeswarar
80. TirumarugalManikkavannar
81. TiruchaathamangaiAyavandeeswarar
82. Nagaikaaronam
(Nagapattinam)
Kaayaaroganeswarar
83.SikkalVennailingeswarar
84. TirukeezhvellurKediliyappar
85. ThevurDhevapureeswarar
86. PalliyinmukkudalMukkona Natheswarar
87. TiruvarurVanmeekinathar
88. Tiruvarur AraneriAraneriyappar
89. Arur ParavayunmandaliThoovoi Nayanar
90. TiruvilamarPathanjali Manoharar
91. TirukaraveeramKaraveeranathar
92. TirupperuvelurPriyanathar
93. TiruthalaiyalankaduAadavalleeswarar
94. TirukudavayilKoneswarar
95. TirucheraiSenneriappar
96. TirunallurmayanamPalasavanesar
97. TirukkaduvaaikaraiputturSwarnapureesar
98. Tiru Erumpoolai (Alangudi)Aabatsakaayeswarar
99. Tiruaradai Perumpaazhi
(Haridwara Mangalam)
Paadhaaleswarar
100. TiruAvalivanallurSatchi Nathar
101. TiruparidhiniyamamParidhiyappar
102. TiruvenniyurKarumbeswarar
103. TiruppuvanoorPushpavanathar
104. TiruppaadhaaleswaramSarpa Pureeswarar
105. TirukkalarKalarmulainatheswarar
106. TiruchittremamPonvaitha Natheswarar
107. TiruvusathanamMandirapureeswarar
108. TiruidumbavanamSargunanatheswarar
109. TirukadikulamKarpageswarar
110. TiruthandalaineeneriNeenerinatheswarar
111. TirukkotturKozhundeesar
112. TiruvenduraiVanduthurainathar
113. TirukollampudurVilvavaneswarar
114. TirupereyilJagadeeswarar
115. TirukollikaaduAgneeswarar
116. TiruthengurVellimalainathar
117. TirunellikaNellivananatheswarar
118. TirunaattiyathaankudiManikkavannar
119. TirukkaaraayilKannayiranathar
120. TirukandrappurNaduthariyappar
121. TiruvalivalamManathunainathar
122. TirukkaichinamKaichina Natheswarar
123. TirukkolliliKolilinathar
124. TiruvoimurVoimoornathar
125. Tirumaraikkaadu
(Vedaranyam)
Maraikattunathar
126. AgasthiyampalliAgastheeswarar
127. KodikkaraiAmirthagateswarar

Districtwise location of these temples
Karur
District (2)
                             Tirukadambandurai, Tirupparaithurai
Nagapattinam District (26)

Tiruvavadutharai, Tiruthuruthi, Tiruvazhundur, Mayiladuthurai, Tiruvilanagar, Tirupariyalur, Tiruchemponpalli, Tirunanipalli, Tiruvalampuram, Tiruthalaichangadu, Tiruakkur, Tirukkadavur, Tirukkadavur Mayanam, Nagaikaaronam, Sikkal, Tirukeezhvellur, Thevur, Tiruvirkudi, Tiruppugalur, Tiruppugalur Varthamaneecharam, Tirumarugal, Tiruchaathamangai, Raamanadeechuram, Tiruppayattrur, Tiruchengattankudi, Tiruchittremam,
Thanjavur District (34)MelaiTirukkattupalli, Tiruvalampozhil, Tiruppoonturuthi, Tirukkandiyur, Tiruchottruthurai, Tiruvedhikudi, TiruThenkudithittai, Tiruppullamangai, TiruChakkarappalli, Tirukkarukavur, Tiruppalaithurai, Avoor Pasupatheeswaram, Tiruchattimuttham, Tirupatteeswaram, Pazhaiyarai Vadatali, Tiruvalanchuzhi, Kumbakonam, Tirukkudanthai Keezhkottam, Tirukkudanthai Kaaronam, Tirunageswaram, Tiruvidaimarudur, Thenkurangaduthurai, Tiruneelakudi, TiruvaikalMadakovil, Tirunallam, Tirukozhambam, TiruppenuPerundurai, Tirunaraiyur, Arisirkaraiputhur, Sivapuram, Tirukalayanallur, Tirukkarukkudi, Tirucherai, Tiruparidhiniyamam

Tiruchirapalli District (6)

                 Tiruvaatpokki, TiruKarkudi,
                 TiruMookkicharam, Tiruchirapalli,
                 TiruErumbiyur, Tirunedungalam
Tiruvarur District (37)
Tirunallur, Tirukkotaru, Ambar Perunthirukovil, Ambar Maakaalam, Tirumeeyachur, Tirumeeyachur Ilankovil, Tiruthiladaipathi, Tiruppamburam, Sirukudi, Tiruveezhimizhalai, Tiruvanniyur, Tirukkaruvili Kottittai, Tiruvaanchiyam, Nannilam, Tirukondeeswaram, Tiruppanaiyur, Palliyinmukkudal, Tiruvarur, Tiruvarur Araneri, Arur Paravayunmandali, Tiruvilamar, Tirukaraveeram, Tirupperuvelur, Tiruthalaiyalankadu, Tirukudavayil, Tirunallurmayanam, Tirukkaduvaaikaraiputtur, Alangudi, Tiruaradai Perumpaazhi, TiruAvalivanallur, Tiruvenniyur, Tiruppuvanoor, Tiruppaadhaaleswaram, Tirukkalar, Tiruvusathanam, Tiruidumbavanam, Tirukadikulam,

Pondicherry State - Kaaraikkal Region (4)Tiruvettakkudi, Tiruthelicheri, Tirudharmapuram, Tirunallaar

Paadal Petra Sivasthalams in Thondai Naadu

LocationLord Shiva known as
1.Kachchi Ekambam (Kancheepuram)Ekambareswarar
2.Tirukkachchi MetraliMettralinathar
3.TiruonakandanthaliOnakandeswarar
4.Kachchi AnekatangaapathamAnekathangaa Padeswarar
5.Kachchineri KaaraikaduKaarai Tirunatheswarar
6.Tirukuranganil MuttamValeeswarar
7.TirumaagaralAdaikalankatha Nathar
8.TiruothurVedhanatheswarar
9.TiruppanankatturPanankatteeswarar
10.TiruvallamVilva Naatheswarar
11.TirumarperuManikandeswarar
12.Tiruvooral (Takkolam)Umapatheeswarar
13.ElambayankotturChandrasekar
14.TiruvirkolamThiripuranthakar
15.TiruvalankaduVadaAranyeswarar
16.TirupaasurVaacheeswarar
17.TiruvenpakkamOondreeswarar
18.TirukkallilSivanandeswarar
19.Chennai - TiruvotriyurAdipureesar, Padampakka Nathar
20.TiruvalidhaayamTiruvalleeswarar
21.TirumullaivayilMasilamani Eswarar
22.TiruverkaduVedhapureeswarar
23.Chennai - TirumayilaiKapaleeswarar
24.Chennai - TiruvanmiyurMarundeesar
25.Tirukkachhur AlakkoilVirunditta Eswarar
26.TiruvidaichuramIdaichuranathar
27.TirukkazhukkundramVedagireeswarar
28.AchchirupakkamAtcheeswarar
29.TiruvakkaraiChandrasekar
30.TiruarisiliArisilinathar
31.Irumbai MaakaalamMakaleshwarar

The present day Chennai, Thiruvallur, Kancheepuram, Vellore, Thiruvannamalai and Villupuram Districts of Tamilnadu were part of the region referred to as Thondai Naadu during the time when Tevaram Hymns were sung by the Nayanmars.


Districtwise location of these temples
Chennai District (3)Tiruvalidhaayam, Tirumayilai, Tiruvanmiyur
Kancheepuram District (11)Kachi Ekambam (Kancheepuram), Tirukkachi Metrali, Tiruonakandanthali, Kachchi Anekatangaapatham, Kachchineri Kaaraikadu, Tirumaagaral, Elambayankottur, Tirukkachhur Alakkoil, Tiruvidaichuram, Tirukkazhukkundram, Achchirupakkam
Tiruvallur District (8)Tiruvotriyur, Tiruvirkolam, Tiruvalankadu, Tirupaasur, Tiruvenpakkam, Tirukkallil, Tirumullaivayil, Tiruverkadu
Tiruvannamalai District (3)Tirukuranganil Muttam, Tiruothur, Tiruppanankattur
Vellore District (3)Tiruvallam, Tirumarperu, Tiruvooral (Takkolam)
Villupuram District (3)Tiruvakkarai, Tiruarisili, Irumbai Maakaalam

Paadal Petra Sivasthalams in Nadu Naadu

LocationLord Shiva known as
1.Tirunelvayil ArathuraiArathurai Nathar
2.Pennagadam (Thoongaanai Maadam)Sudarkozhundeesar
3.TirukkoodalaiyatrurNerikkattunayagar
4.ErukkattampuliyurSwedhaarka Vaneswarar
5.TiruthinaiNagarSivakozhundeesar
6.TiruchopuramChopuranathar
7.TiruvathigaiAthigaiVeerattanathar
8.TirunaavalurTirunaavaleswarar
9.TirumudukundramPazhamalainathar
10.TirunelvennaiVennaiyappar
11.TirukkovilurVeeratteswarar
12.TiruAraiyaninallurOppillaadha Eswarar
13.TiruvidaiyaruIdaiyattrunathar
14.TiruvennainallurThaduthu Aatkondanathar
15.TiruthuraiyurPasupatheeswarar
16.VadugurPanchanatheeswarar
17.TirumaanikuzhiVaamanapureeswarar
18.TiruppadiripuliyurPaadaleeswarar
19.TirumundeeswaramSivaloga Nathar
20.Puravar PanankatturPanankatteesar
21.Tiru AamaathurAzhagiyanayanaar
22.TiruvannamalaiArunachaleswarar

The present day Villupuram, Cuddalore, Tiruvannamalai districts of Tamilnadu were part of the region referred to as Nadu Naadu during the days when the Teveram Hymns were sung by the Nayanmars.
Districtwise location of these temples
Cuddalore DistrictTirumudukundram (Viruddhachalam), Tirunelvayil Arathurai, Pennagadam (Thoongaanai Maadam), Tirukkoodalaiyatrur, Erukkattampuliyur, TiruthinaiNagar, Tiruchopuram, Tiruvathigai, Tirumaanikuzhi, Tiruppadiripuliyur,
Villupuram DistrictTirunaavalur, Tirunelvennai, Tirukkovilur, TiruAraiyaninallur, Tiruvidaiyaru, Tiruvennainallur, Tiruthuraiyur, Tirumundeeswaram, Puravar Panankattur, Tiru Aamaathur
Tiruvannamalai DistrictTiruvannamalai
Pondicherry StateVadugur

Paadal Petra Sivasthalams - In Kongu Naadu

Paadal Petra Sivasthalams in Kongu Naadu

LocationLord Shiva known as
1.Thirunanaa (Bhavani)Sangameswarar
2.TiruchengodeArdhanareeswarar
3.Karuvoor (Karur)Pasupathinathar
4.TirumurugapoondiTirumuruganathaswamy
5.Tiruppandikodumudi (Kodumudi)Kodumudinathar
6.Tiruppukkoliyur (Avinasi)Avinasiappar
7.VenjamaakudalVigirthanatheswarar
The present day Coimbatore, Erode, Namakkal, Tiruppur and Karur Districts of Tamilnadu were part of the region referred to as Kongu Naadu during the time when Thevaram Hymns were sung by the Nayanmars.
Districtwise location of these temples
Tiruppur DistrictTiruppukkoliyur (Avinasi), Tirumuruganpoondi
Erode DistrictTirunanaa (Bhavani), Tirupaandikkodumudi
Namakkal DistrictTiruchengode
Karur DistrictVenjamaakudal, Karuvoor (Karur)

Paadal Petra Sivasthalams in Pandiya Naadu

Paadal Petra Sivasthalams in Pandiya Naadu

LocationLord Shiva known as
1.TiruAalavai (Madurai)Sokkanathar
2.TiruAppanurAappudaiyar
3.TirupparankundramParangirinathar
4.TiruvedagamEdaganatheswarar
5.TirukodunkundramKodunkundreesar
6.TirupputturTiruthalinathar
7.TiruppunavayilPazhampathinathar
8.Rameswaram (one of the 12 Jyothir Linga Shrines)Ramanathaswamy
9.TiruvadanaiAadanainathar
10.TirukkaanapperKaalaiyappar
11.TirupuvanamPoovananathar
12.TiruchuzhiyalTirumeninathar
13.KuttralamKurumpalaanathar
14.TirunelveliNellaiappar

The present day Madurai, Virudunagar, Ramanathapuram, Pudukottai, Sivagangai and Tirunelveli districts of Tamilnadu were part of the region referred to as Pandiya Naadu during the days when the Teveram Hymns were sung by the Nayanmars.

Districtwise location of these temples
Madurai DistrictMadurai, Tiru Appanur, Tirupparankundram, Tiruvedagam
Virudunagar DistrictTirukodunkundram (Piranmalai), Tiruchuzhiyal
Ramanathapuram DistrictRameswaram, Tiruvaadaanai
Sivagangai DistrictTiruputtur, Tirukkaanapper (Kaalayarkovil), Tiruppuvanam
Pudukottai DistrictTiruppunavayil
Tirunelveli DistrictKuttralam, Tirunelveli

Wednesday, November 16, 2016

காலக் கணிதத்தின் சூத்திரம்! -II

ன்பது கிரகங்களின் நடைபாதை நட்சத்திரங்கள். அந்த நட்சத்திரங்கள் உருவமற்ற ராசிகளுக்கு வடிவம் கொடுத்தன. கிரகங்களின் சலனத்தை உணர்வதற்காக முனிவர்களின் சிந்தனையில் உருவானது ராசி. ஆகாய விமானம் விண்வெளியில் குறிப்பிட்ட பாதையில் பிசகாமல் செயல்படும். பாதையின் உருவம் கண்ணுக்கு இலக்காகாது. ஆனால், அதை ஓட்டுநரின் மனம் உணரும். கடல் பயணத்திலும் பாதை புலப்படாது. கலங்கரைவிளக்கம் பாதையை  உணரவைக்கும்.


நட்சத்திரங்களுக்கு 'ஜோதிஸ்’ என்று பெயர் வைத்தது வேதம் (ஜ்யோதிரிதிநக்ஷத்ரேஷ§). சூரியனும், சந்திரனும் ஜ்யோதிஸ்ஸில் (ஒளியில்) அடங்கும் என்று விளக்கியது (சூர்யோ ஜ்யோதி:ஜ்யோதி: ஸுர்யஸ்வாஹா). சூரிய கிரணத்தின் ஊடுருவலால் சந்திரனும் ஜ்யோதிஸ் என்று விளக்கியது (ஸுஷ§ம்ன:ஸுர்யரச்மி: சந்திரமா...). சூரியன், சந்திரன், நட்சத்திரம் இந்த மூன்று ஒளிகளும் இணைந்து உருவானது ஜோதிடம். ஜோதிஸ் என்ற சொல்லுக்கு ப்ரகாசம், விளக்கம், விளக்கு, ஒளி என்று பொருள் உண்டு. இம்மூன்றும் நிரந்தர அழிவைச் சந்திக்காது. நான்கு யுகங்களின் முடிவில்... அத்தனை உயிரினங்களும் பரம்பொருளில் ஒன்றி மறையும். அந்த பிரளய காலத்தில் மறையும் இந்த மூன்று ஒளிப் பிழம்புகளையும் பரம்பொருள், முன்பு விளங்கிய வடிவில் மீண்டும் தோன்ற வைக்கிறார் என்ற தகவல் வேதத்தில் உண்டு (சூர்யா சந்திரமஸெள தாதாயதாபூர்வமகல்பயத்).


கண்ணுக்குப் புலப்படும் ஒளிப்பிழம்புகள் ஜோதிடத்துக்கு ஆதாரம். கடவுளைக் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் எனச் சொல்லும் நாத்திகருக்கும் இந்த மூன்று ஒளிப்பிழம்புகளும் தென்படும். அழியாத அடித்தளத்தில் அமைந்த ஜோதிடம், நம்பிக்கையின்மைக்கு இடமளிக்காது. இருட்டில் மறைந்த பொருள்களை அடையாளம் காண விளக்கு பயன்படும். முற்பிறவியில் நாம் செய்த செயல்பாடுகள் இப்பிறவியில் நமது சிந்தனைக்கு எட்டாமல் மறைந்திருக்கும். அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் ஒளிப்பிழம்பு தான் ஜோதிடத்தின் வடிவம் என்று வராஹமிஹி ரரின் புதல்வர் ப்ருதுயசஸ் விளக்குவார் (யதுபசிதமன்யஜன்மனி...). முற்பிறவிகளின் கர்மவினையை அடையாளம் கண்டு அதன் பலனை நம்மோடு இணைக்கும் வேலையை, மூன்று ஒளிப்பிழம்புகளில் ஒன்றான கிரகங்கள் நடைமுறைப்படுத்தும். 'கிரகம்’ என்று சொல் லுக்கு, 'எடுத்துப் பரிமாறுபவன்’ என்ற பொருள் உண்டு என்கிறது ஜோதிடம் (க்ருஹ்ணாதீதிக்ரஹ:). கர்மவினையை கிரகங்கள் வாங்கி நம்மில் இணையவைக்கும். ராசியோடும் நட்சத்திரத் தோடும் இணைந்த கிரகங்கள் காலத்துடன் இணைந்து, காலம் வழியாக நம்மில் இணைந்து இன்ப- துன்பங்களை உணரவைக்கும்.



உடலைத் துறந்து வெளிவந்த ஜீவாத்மா, தான் சேமித்த கர்ம வினையைச் சுவைத்து மகிழ புதியதொரு உடலில் நுழைந்துவிடும் - நைந்துபோன ஆடையை அகற்றிவிட்டு, புது ஆடையை ஏற்பதுபோல்!


வாஸாம்ஸிஜீர்ணானி யதாவிஹாய என்ற கீதாசார்யரின் கணிப்பைக் கவனியுங்கள், உண்மை விளங்கும். கோடிக் கணக்கான ஜீவராசிகளில் இந்த ஜீவாத்மா எதில் நுழைந்தாலும் அவனை அடையாளம் கண்டு, அவனோடு இணைந்துவிடும். விட்ட உடலில் இருந்த ஜீவாத்மாவின் ஜீவாணுக்கள் உருவம் மாறித் தென்பட்டாலும் கண்டுபிடித்து விடும். ஆயிரக்கணக்கான மாடுகளை உள்ளடக் கிய மாட்டு மந்தையில், கன்றுக்குட்டி தன் தாயைச் சரியாக அடையாளம் கண்டு இணைந்து விடும் என்கிறது சாஸ்திரம்.
கர்மவினையை இணைக்கும் பாலம் காலம். அது அழிவற்றது. நாம் அழிவைச் சந்திப்போம்; காலம் தொடர்ந்து கொண்டிருக்கும். 'அவர் காலமானார்’ என்ற சொல்லை ஆராய்ந்தால் உண்மை விளங்கும். உடலைத் துறந்த ஜீவாத்மா காலத்தில் இணைந்துவிட்டது. காலம் கண்ணுக் குப் புலப்படாது.


ஜீவாத்மாவும் புலப்படாமல் இருந்துவிடும். அவரது மரணத்தை வைத்து அவரது காலம் முடிந்துவிட்டதே தவிர, காலம் முற்றுப் பெறாது. அழிவற்ற ஒளிப்பிழம்பு களும், முற்றுப்பெறாத காலமும் நம் சிந்தனை யில் வெளிப்பட்டு இன்ப- துன்பங்களை உணர வைக்கின்றன.


நமது இன்ப- துன்ப உணர்வுகளுக்கும் நாம் தான் காரணம் என்பதை சாஸ்திரம்விளக்கும் (ஸ்வகர்ம சூத்ரக்ரதிதோஷிலோக:). ஐம்பெரும் பூதங்களின் ஒருவித கலவையில் உருவானது, உடல். 'இதிபூதமயோதேஸி:’ என்கிறது ஆயுர் வேதம். அதில், 'ஆகாசம்’ என்ற பூதமும் இணைந்தே இருக்கும். அதில் ஒளிப்பிழம்புகளின் அம்சமும் இருக்கும். வெளியே தென்படும் ஆகாசம் நம் இதயத்திலும் பரவியிருக்கும் என்று உபநிடதம் வரையறுக்கும் (யாவான்வா ஆகாச: தாவான் அந்தர்ஹிதய ஆகாச:) ஆகாசத்தில் தென்படும் ஒளிப்பிழம்புகள் இதயத்திலும் இடம் பிடித்திருக்கும். ஆகாசத்தில் நிகழும் கிரகச் சலனமானது, இதயத்தில் பரவியுள்ள ஒளிப்பிழம்பு அம்சத்திலும் சலனத்தை உண்டு பண்ணும்- பவர்ஹவுஸில் இருக்கும் மின்சாரத் தின் சலனம் வீட்டிலுள்ள பல்புகளையும் சலனத் துக்கு ஆட்படுத்துவது போன்று! வெளியே இருக்கும் வெப்பம் நம் சிந்தனையை பாதிப்புக்கு உள்ளாக்கும்.


வெப்பம் ஏற ஏற, அதன் தாக்கத் தில் உடலில் இருக்கும் நரம்புகள் விரிவடைந்து, ரத்தம் அளவுக்கு அதிகமாக வெளியேறுவதைப் பார்க்கிறோம். கடும் வெயிலின்போது, உடலில் எங்கேனும் அடிபட்டால் ரத்தம் அதிகமாகப் பீறிட்டு வெளிவருவது உண்டு. ஆகையால், கிரக நாயகனான ஒளிப்பிழம்பின் தாக்கம் உடலையும் பாதிக்கும். முழு நிலவு நாளில் கடல் அதிகமாக அலைகளை ஏற்றுப் பொங்கும். ஜடத்திலும் அதாவது சைதன்யம் தென்படாத பொருளிலும் ஒளிப் பிழம்பின் தாக்கத்தை உணர முடியும். சூரிய காந்தக் கல் நெருப்பை உமிழ்வதும், சந்திர காந்தக் கல் நீரை வெளியிடுவதும் கிரகங்களின் தாக்கத்தாலேயே என்பது கண்கூடு. ஜடப்பொரு ளிலும் விலங்கினங்களிலும் 6-வது அறிவு இல்லாததால், இயற்கைக்கு இசைவாகச் செயல்படும். சிந்தனை வளம் பெற்ற மனித இனம் ஆசையின் உந்துதலில் கண்மண் தெரியாமல் இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டு, உயர்ந்த பிறவியை செல்லாக் காசாக மாற்றுகிறது என்றால் மிகையாகாது.



கிரகங்களின் தாக்கம் அத்தனைப் பொருட் களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். தாறுமாறான சுற்றுச்சூழலுக்கும், இசைவான சுற்றுச் சூழலுக் கும் ஒளிப்பிழம்புகளின் பங்கு உண்டு. சூரியனி லும் சந்திரனிலும் தென்படும் வெப்பதட்பங்கள் 6 பருவ காலங்களை உருவாக்குகிறது என்கிறது வேதம் (சந்திரமா: ஷதோதா ஸரிதூன் கல்பயாதி). வெப்பத்தில் தட்பத்தையும், தட்பத் தில் வெப்பத்தைத் தேடுவதும் அன்றாட அலுவல்களில் ஒன்றாகிவிட்டது. கிரகங்களின் தாக்கத்தின் வெளிப்பாடு அது என்பது சிந்தனை வளம் பெற்றவர்களுக்கு விளங்கும்.


ஒளிப்பிழம்புகள் சராசரத்தையே தங்களின் தாக்கத்தால் மாறுதலுக்கு உட்படுத்துகின்றன. இதயத்தில் உறைந்திருக்கும் கிரகங்களின் அம்சம் வெளிச் சலனத்துக்கு உகந்தவாறு தன்னை மாற்றிக்கொண்டு, கர்ம வினையை சிந்தனையோடு இணைத்துவிடும். ஆக, கர்ம வினையின் தராதரத்துக்கு ஏற்ப நம் சிந்தனை வசமிழந்து... அதாவது, கர்மவினையின் சிந்தனையைத் தனது சிந்தனையாக மாற்றிக் கொள்ளும். அந்த சிந்தனையின் எல்லை இன்பத்திலோ துன்பத்திலோ முடிவு பெறும். முடிவை வைத்தே கர்ம வினையின் உருவத்தை நம்மால் உணர இயலும்.


கர்ம வினையின் தரத்தை முன்னதாக அறிய இயலாத நிலையில், அது விதியாக உருவெடுக் கிறது. மாட்டு மந்தையை அடக்கி ஒடுக்க கையில் தடியை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து சோர்வுற்று செயல் படுவான் மாட்டுக்காரன். மனிதனை அடக்க, ஒடுக்க, கண்டிக்க, வாழ்த்த... ஒளிப்பிழம்புகள் கர்மவினையை அவனது சிந்தனையில் நுழைத்து செயல்பட வைக்கும்; மனிதனின் சுக- துக்கங்களுக்குச் சாட்சியாகப் பார்த்துக்கொண் டிருக்கும். தன் கையால் தன் கண்ணைக் குத்த வைக்குமே தவிர, ஒளிப்பிழம்புகள் நேரடியாகப் பலனளிக்காது.


கிரகங்கள் அத்தனைப் பொருள்களிலும் தங்களது தாக்கத்தால் மாறுபாட்டை விளைவிக் கும். உற்பத்திக்கு நீரும் பரிணாமத்துக்கு நெருப்பும் வேண்டும். தேவர்களிலும், மனிதர் களிலும், விலங்கினங்களிலும் பறவைகளிலும், செடி- கொடிகளிலும், கல்லிலும், மண்ணிலும் அதன் தாக்கத்தை விளக்கும் வகையில், சூரியனுடைய ரத்னம், அதன் தானியம், அதன் வஸ்திரம், அதன் நிறம், அதன் திக்கு, அதன் காலம்... இப்படி அத்தனை ஒளிப்பிழம்புகளுக்கும் சராசரத்தின் தொடர்பை விளக்குகிறது ஜோதிடம்.


மனிதனில் ஏற்படும் காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், மாச்சரியம் போன்ற துக்கத்துக்குக் காரணமான ஆறு குணங்களிலும் ஒளிப்பிழம்பின் பங்கை வரையறுக்கும். ஆன்ம குணங்களான, ஈவு இரக்கம், பரோபகாரம் போன்றவற்றிலும் பங்கு உண்டு. 'நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது’ என்ற வழக்குச் சொல்லை கவனியுங்கள். அதில், தெய்வம் என்ற சொல்லுக்கு, 'கர்ம வினை’ என்று பொருள் என்கிறது சாஸ்திரம் (தைய்வம் திஷ்டம் பாகதேயம்...). நாம் நினைப்பதைச் செயல்படவிடாமல் கர்மவினை சிந்தனையைத் திருப்பி செயல்படவைக்கிறது. சிக்கலில் மாட்டிக்கொண்ட சிந்தனை, முட்டுச் சந்தில் முட்டிச் செயலிழக்கும் தறுவாயில், கர்மவினை வெளிப்பட்டு வடிகாலாக மாறி, தனது சிந்த னையை அவன் சிந்தனையாக ஏற்க வைத்துச் செயல்படவைக்கும். அது, துயரத்திலோ மகிழ்ச்சியிலோ முற்றுப்பெறும். அது துயரத் திலா அல்லது மகிழ்ச்சியிலா என்பதை கிரகங் கள் கோடிட்டுக் காட்டும். இங்குதான் ஜோதிடத் தின் பங்கு நமக்கு உதவுகிறது.


'வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்று ஒரு சொற்றொடர் உண்டு. முற்பிறவியில் அவன் விதைத்த கர்மவினையை இப்பிறவியில் பக்குவமான பிறகு அறுக்கிறான்; அனுபவிக்கி றான் என்கிறது சாஸ்திரம். அவனது செயல்பாடு ஒன்று கர்ம வினையாகவும், மற்றொன்று முயற்சியாகவும் பார்க்கிறோம். சிந்தனைக்கு எட்டாத முயற்சியை கர்மவினை என்றும், சிந்தனையோடு செயலில் இறங்கும் நிகழ்வை முயற்சி என்றும் பாகுபடுத்தி விளக்குகிறது ஜோதிடம். மறைந்திருக்கும் கர்மவினை, அதன் தரம், அது வெளிப்படும் வேளை அத்தனையையும் நமக்கு விளக்குகின்றன அந்த ஒளிப்பிழம்புகள். முக்காலத்திலும் நிரந்தரமாக ஒளிவிட்டுப் பிரகாசித் துக்கொண்டிருக்கும் கிரகங்கள் மனிதனின் முக்கால விளைவுகளையும் திரட்டித் தருவதில் ஆச்சரியமில்லை. மூன்று உலகங்களின் ஒளி விளக்கு கிரக நாயகன் சூரியன் என்று குறிப்பிடுவார் வராஹமிஹிரர் (த்ரை லோக்ய தீபோரவி:).
அண்டவெளியில் 'ப்ரவஹம்’ என்ற காற்றின் உதவியுடன், கோள வடிவில் சுழலும் கிரகங்கள் வெகுதொலைவில் இருக்கும் ஜீவராசிகளைத் தாக்கும் என்ற சிந்தனையை ஏற்காதவர்களும் உண்டு.


சிந்தனை வளம் குன்றியவர்களுக்கு மட்டுமே அது பொருந்தும். வெளிநாட்டில் எங்கேயோ ஒரு கோடியில் நிகழும் நிகழ்வு, நம் வீட்டுத் தொலைக்காட்சியில் தென்படுகிறது.அதற்கான தொடர்பு நம் கண்ணுக்குப் புலப்படாது. அதேபோன்று, எங்கும் நிறைந்து பரந்து கிடக்கும் ஆகாசம், அதில் இருக்கும் ஒளிப்பிழம்புகளின் தொடர்பு அதைச் சாத்தியமாக்கும் என்ற உண்மை சிந்தனை வளம் பெற்றவர்களுக்கு மட்டும் எட்டும்.

காலக் கணிதத்தின் சூத்திரம்! - I

ர்மவினை, காலம், முனிவர்களின் கணிப்பு ஆகிய மூன்றும் ஜோதிடப் பகுதியின் அடித்தளம். முனிவர்களது சிந்தனை, நாம் சந்திக்கப்போகும் அனுபவத்தை முன்னரே கோடிட்டுக் காட்டிவிடும். கிரகங்களுடன் இணைந்த காலம், முனிவர்களது சிந்தனையின் ஒத்துழைப்புடன், நமது கர்மவினையின் தரத்தை வெளிக்கொண்டு வரும். இன்ப-துன்பங்களுக்கு நமது செயல்பாடுகளே காரணம் (ஸ்வகர்மசூத்ரக்ரதிதோஷிலோக:). ஜோதிடம், கர்ம வினையின் அனுபவ வேளையைச் சொல்லும். காலம், முனிவர்கள் வாக்கு நமது இன்ப- துன்பத்தை மாற்றியமைக்காது.


சூரிய கிரணங்களின் தாக்கத்தில் ஏற்படும் மாறுதல், காலத்தின் அளவுகோல் என்கிறது வேதம் (தஸ்யா:பாகவிசேஷண ஸ்முருதம் காலவிசேஷணம்). கடிகார முள், சூரியனின் உதயாஸ்தமனம் ஆகியவற்றை காலத்தின் அளவுகோலாகப் பார்ப்போம். பரம்பொருள் கால வடிவில் முத்தொழிலை நடைமுறைப்படுத்துகிறார் என்கிறது ஜோதிடம் (கால:ஸ்ருஜதிபூதானி, கால:ஸம்ஹரதேப்ரஜா:). காலம் அனாதி அனந்தம்; அத்தனை செயல்பாடுகளுக்கும் காலம் ஆதாரம் (ஸர்வாதார:கால:). காலம், இயற்கை, கடவுள் மூன்றுக்கும் ஒரே இயல்பு. கண்ணுக்குப் புலப்படாத கடவுள், இயற்கை வடிவிலும் கால வடிவிலும் தோன்றுவார். தசாவதாரங்களில் கடவுள் மாற்று உருவில் தோன்றினார். உலகவியல் செயல்பாடுகளில் அவரது இணைப்பு மறைமுகமாக இருக்கும். கடவுளை நேரில் பார்க்க இயலாது. அவருக்கு உருவம் இல்லை. நிக்ரஹம், அனுக்ரஹம் இரண்டையும் காலத்தின் வடிவில் அவர் நடைமுறைப்படுத்துகிறார். இயற்கை நம்மை தண்டிக்கிறது; வாழ்த்துகிறது.


ஈச சக்தி பஞ்ச பூதங்களை இயக்கும். ஐம்பெரும் பூதங்களில் ஒன்று ஆகாசம். கிரகங்கள், நட்சத்திரங்கள், மின்னல், நெருப்பு (இடி) அத்தனையும் ஆகாசத்தில் இருக்கும். அவை, பரம்பொருளின் துணையில் இயங்குகின்றன. அவற்றுக்கு ஒளி தந்தது ஈசனின் ஒளி என்கிறது வேதம் (நதத்ரசூர்யோபாதிநசைந் திரதாரகம்...). பஞ்ச பூத சிந்தாந்தம், கர்ம சிந்தாந்தம், புனர்ஜன்ம சித்தாந்தம் ஜோதிடத்தின் உயிர் நாடி. அத்தனையும் இயற்கையின் விளைவுகள். இயற்கையின் ரகசியத்தை அறிய முடியாதவர்களுக்கு ஜோதிடம் புரியாது. தெரியாமல் தொட்டாலும் நெருப்பு சுடும். அதேபோன்று, தெரியாதவர்களிலும் ஜோதிடத்தின் தாக்கம் உண்டு. முனிவர்களின் சிந்தனை மனித குலத்தை உயர்த்த ஏங்கும். சிந்தனை வளம் பெற்ற மனிதன் அதை ஏற்று, உலகவியலிலும் ஆன்மிகத்திலும் உயர்வைப் பெற்று மகிழலாம்.
வாழ்வில் நிச்சயமாக அனுபவத்துக்கு எட்டும் பலன்களை, 'த்ருட பலன்’ என்று சொல்லும் ஜோதிடம். அவற்றை நட்சத்திரங்களின் தொடர்புடன் ஒட்டிவரும் தசாபலன்கள் வரையறுக்கும். சூழலை ஒட்டி மாறுபடும் பலன்களை, 'அத்ருட பலன்’ என்கிறது ஜோதிடம். அஷ்டவர்க்கம், சந்திரசாரம் ஆகியவற்றால் அது வெளிப்படும். சில பலன்கள், அதற்கு உகந்த சூழல் உருவாகாமல் இருந்தால் தென்படாது. அப்படியே உருவானாலும் கடைசி நிமிடத்தில் நழுவிவிடும். இன்னும் சில பலன்கள், காக்கை உட்காரப் பனம் பழம் விழுவது போன்று அனுபவத்துக்கு வந்துவிடும். இதை, 'த்ருடாதிருட பலன்’ என்கிறது ஜோதிடம். யோகங்கள் வாயிலாக அந்தப் பலன் வெளிப்படும்.


ராஜ யோகம், கஜகேஸரி யோகம், நீசபங்க ராஜயோகம் ஆகியவற்றின் பலன் நடைமுறைக்கு வரலாம்; வராமலும் போகலாம். அந்தந்த சூழலுக்கு தம்மை மாற்றிக்கொள்ளும். இப்படி, பலன் சொல்லும் பகுதியில் மாறுபாடுகளை ஜோதிடம் வரையறுக்கும். வேதம், சாஸ்திரம், புராணங்கள், இதிகாசங்கள், சம்பிரதாயம், நடைமுறைகள், மனவியல், வானவியல், உடற்கூறு, உயிரினங்களின் இயல்பு, தர்க்கம், ஆன்மிகம் ஆகியவற்றில் அறிவு வேண்டும். ஜோதிட சித்தாந்த நூல்கள், பலன் சொல்லும் பகுதிகளைக் கற்றுத் தெளிவு பெற்றிருக்க வேண்டும்; எந்தக் கோட்பாட்டை எங்கு இணைக் கலாம், எங்கு விலக்கலாம் என்ற பாகுபாட்டையும் அறிந்தி ருக்க வேண்டும்; தியானம், தவம் ஆகியவற்றால் மனம் மாசற்று இருக்க வேண்டும் என்று ஜோதிடம் கூறுபவனை வரையறுக்கிறது ஜோதிடம் (அகேஹோரா சாஸ்த்ரக்ஞ...).


கிரகங்களை துல்லியமாகக் கணித்து கிரக நிலையில் அதன் இருப்பிடத்தை சரிபார்க்க வேண்டும். மனித சிந்தனையில் விளையும் அத்தனைப் பலன் களையும் கிரகநிலையின் 12 கட்டங்களில் அமர்ந்த கிரகங் கள் முழுமையாக வெளியிடும். கால மாறுபாடு செயல்பாட்டின் தரம், விஞ்ஞானம், பொருளா தாரம் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றம் அத்தனையும் 12 கட்டங்களில் அடங்கும். மனித சிந்தனையின் அத்தனை மாற்றங்களையும் உள்ளடக்கிய பலன்களை, கிரகநிலையில் இருக்கும் கிரகங்கள் சொல்லி விடும்.


7-ஆம் பாவத்துக்குப் பலன் சொல்வதாக இருந்தால், 7-ல் இருக்கும் கிரகம், அதனுடன் இணைந்த கிரகம், அதைப் பார்க்கும் கிரகம், 7-ஆம் பாவாதிபதி நின்ற ராசிநாதன், அதன் அம்சக நாதன், லக்னாதிபதி, சந்திர லக்னாதிபதி, காரகக் கிரகம் ஆகியவற்றின் தொடர்பு, அத்தனை கிரகங்களில் ஷட்பலம், ஷோடசபலம் ஆகியவற்றால் அவற்றின் வலு ஆகிய அத்தனையையும் ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும். ஒரு கிரகத்தின் பலன் மற்றொரு கிரகத்தின் பலனை இழக்க வைக் காது. வலுவுக்கு உகந்த வகையில் பலனில் மாறுபாடு இருக்கும். இருக்கிற கிரகம், பார்க்கும் கிரகம், பாவாதிபதி, அம்சகாதிபாதி ஆகியவற்றின் கூட்டுப் பலன் அனுபவத்துக்கு வரும். காடு என்றால், ஒரு மரத்தை மட்டுமே குறிக்காது. அதுபோல் ராசி (குவிப்பு) என்பதும் ஒரு கிரகத்தை மட்டும் குறிக்காது. இப்படி ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும். 'சூரியன் உச்சன். ஓஹோ என்று இருப்பான்...’, 'குரு உச்சன் வளமான வாழ்வு உண்டு...’ என்று சொல்ல இயலாது. மற்ற கிரகங்களின் இணைப் பில் அவர்களது தகுதி ஏற்றமும் இறக்கமுமாய் இருக்க வாய்ப்பு உண்டு.


நட்சத்திர பாதங்கள் நவாம்சகமாக உருப் பெறும். கிரக நிலையும் அம்சகமும் பிரிக்க இயலாத ஒன்று. தெளிவாகத் தெரிந்துகொள்ள தனித்தனிக் கட்டத்தில் போடுகிறோம். ஒரு கிரகத் தின் தசையில் 9 கிரகங்களுக்கும் பங்குண்டு. புத்தியிலும் அந்தரத்திலும் 9 கிரகங்களும் இரு முறை இணைந்திருக்கும். 9 கிரகங்களுடன் இணைந்த பலன் தசாநாதனில் தென்படும். இங்கும் கூட்டுப்பலனே கோலோச்சும். உடலுறுப்பு களில் தோன்றும் உபத்திரவம் ஒட்டுமொத்த உடலோடு இணைந்திருக்கும். தாக்கம் எங்கு இருந்தாலும் மனத்தையும் பாதிக்கும். பாதிப்பு லக்னத்துக்கு உடையவனில் தென்படும்.
கணிதம் கிரகங்களின் அமைப்பை வெளியிடும்; பலன் சொல்லாது. தற்போது விஞ்ஞானம் கணினி வழியாக அடிப்படை கணிதத் தகவல்களை திரட்டித் தருகிறது. ஆனாலும் பலன் சொல்லும் அளவுக்கு கணினி தற்போது முன்னேறவில்லை. சூழலுக்கு உகந்தவாறு, அந்த நொடியில் கிரகத்தின் செயல்பாடுகளை வைத்து ஊஹாபோஹங்களுடன் பலன் மாறுபடும். அதை கணினியில் திணிக்கும் முறை இன்னும் உருவாகவில்லை. திடீரென ஒரு பிரச்னையைச் சந்திக்கும் தருணத்தில், சிந்தனை செயல்பட்டு அதிலிருந்து விடுபட வழிகாண வேண்டும். இதை, 'ப்ரத்யுத்பன்னமதி’ என்கிறது சாஸ்திரம். இப்படிச் செயல்பட வேண்டுமெனில், கணினி மனிதனாக மாறினால் மட்டுமே இயலும்.


மனத்தின் போக்கு எப்படியெல்லாம் செயல் படும் என்பதை வரையறுக்க இயலாது என்கிறது சாஸ்திரம் (சிந்த்யம் மன:). 12 பாவ பலன்களும் லக்னத்துடன் இணைத்துச் சொல்லப்பட வேண்டும். இங்கும் கூட்டுப் பலன்தான் நடைமுறைக்கு வரும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய இயலும்; ஆயுள் இருந்தால் மட்டுமே கிரகங்கள் சுட்டிக்காட்டும் பலன்கள் அனுவத்துக்கு வரும் என்கிறது ஜோதிடம் (பூர்வம் ஆயு: பரீக்ஷேத பச்சாத்லக்ஷணமாதி சேத்). ஆயுள் இல்லாத வனுக்கு கிரக அமைப்பில் சொல்லும் பலன்கள், யோகங்கள் அத்தனையும் வீணாகிவிடும்.


நீச பங்கராஜ யோகம், பஞ்சமஹாபுருஷ யோகம், கஜகேஸரி யோகம், சசிமங்கள யோகம் - இப்படி நீண்ட பட்டியல் ஜாதகத்தில் தென்படுவதைப் பார்த்து, அத்தனை யோகங் களும் அனுபவத்துக்கு இருப்பதால், அவனுக்கு ஆயுள் இருந்தே ஆகவேண்டும் என்ற கோண லான முடிவு தவறு. 5-ல் குரு, 7-ல் சனி, 8-ல் செவ்வாய் - இப்படி எண்ணிக்கையை வைத்து பலன் சொல்லும்போது, ராசியின் தரத்தில் மாறுபட்ட பலனை வெளியிடுவது, முனிவர்களது சிந்தனையை அலட்சியப்படுத்துவதாகும். கேந்திரம், த்ரிகோணம், உபசயம், அபசயம், ஷஷ்டாஷ்டகம், தவித்வாதசகம், சத்ரு, மித்திரன், சமம், பாதகாதிபதி, யோக காரகன் போன்ற விஷயங்களை முனிவர்கள் வரையறுத்துக் கூறும்போது, அதில் நமது புதுச் சிந்தனையைப் புகுத்தினால், பலனை எட்டுவதில் தடுமாற்றம் ஏற்படும். முனிவர்கள் சிந்தனையை ஆராய்ந்து தெரிந்து கொள்ளும் தகுதி இருக்க வேண்டும். நாமே புதுச் சிந்தனையை திணிக்க வேண்டிய அவசியம் இல்லை.


மனதின் சிந்தனை எப்படியெல்லாம் செயல் படும் என்பதை ஒட்டுமொத்தமாக அறிந்த பிறகே அவர்களின் சிந்தனை எழுந்தது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். தனிமனித னின் அனுபவத்தை வைத்துப் பலனை இறுதி செய்யக்கூடாது. ஒவ்வொரு மனிதனிலும் அனுபவம் மாறுபட்டு இருக்கும். பலனை வைத்துக் காரணத்தை இறுதி செய்யக் கூடாது; காரணத்தை வைத்து பலன் சொல்ல வேண்டும். ஒரு மகானின் ஜாதகத்தை வைத்து, அதற்குக் காரணத்தை இறுதி செய்வது பொருந்தாது. குழந்தை பிறந்ததும் இவன் மகான் ஆவான் என்று சொல்லத் திறமை இருக்க வேண்டும். ஜவஹர்லால் நேருவின் பெருமையை அனுபவ த்தில் உணர்ந்தபிறகு, அவரது ஜாதகத்தை ஆராய்ந்து பெருமைக்குக் காரணத்தை வெளி யிடுவது சுலபம். அவர் பிறந்தபோதே, அவர் இப்படி வருவார் என்று சொல்வது திறமை.
அனுபவ ஜோதிடம் என்பது ஜோதிடத்தின் தரத்தைத் தாழ்த்திவிடும். ஒரு நொடியில் பலன் சொல்லும் திறமை நம்மில் இன்னும் வளர வில்லை. குரு- சிஷ்ய பரம்பரையில் கற்க வேண்டிய கல்வி, ஜோதிடம். 'ஹாபி’யாக அதை அறிந்து அறிஞனாக இயலாது. புத்தகக் கல்வியும் முழு அறிவைப் புகட்டாது. பல நுணுக்கங்களை அறிந்து செயல்பட குருவிடம் பயில வேண்டும். ஆண், பெண்ணிடம் குடி கொண்டிருக்கும் நற்குணங்களையும், பண்பை யும் அறிந்த பிறகு, பொருத்தத்தில் இறங்க வேண்டும். வெறும் ஜாதகப் பொருத்தம் இணைப்பை உறுதி செய்யாது. செல்வச் செழிப்பு, குழந்தைச் செல்வம், மகிழ்ச்சி ஆகியவற்றை உறுதி செய்ய லக்னாதிபதி, 2-ஆம் பாவாதிபதி, 5-ஆம் பாவாதிபதி இவற்றை மட்டும் பார்த்தால் போதாது. 12 பாவங்களையும், அத்தனை பாவங்களுக்கும் லக்னாதிபதியின் இசைவான இணைப்பையும், அதன் வலுவையும் ஆராய்ந்து சொல்லவேண்டியிருக்கும்.
'நான் யார்’ என்று புரிந்துகொள்ள ஜாதகம் உதவும். கல்வி மற்றும் முயற்சியால் கிடைக்க வேண்டிய பெருமைகளுக்கு ஜாதகம் உதவாது. படிக்காதவனுக்கு பாக்கியம் இருந்தாலும் உயர் பதவி மதிப்பளிப்பதில்லை. பேசாமடந்தையான அதிகாரிகளும் செயல் திறனற்ற பணியாட்களும் தென்படுவது உண்டு. எல்லாம் நிறைந்த மனிதனிலும் மனம் அமைதி பெறவில்லை; ஏழையிலும் மனம் தடுமாறுவதில்லை. ஆன்ம சோதனை செய்வற்கு ஜாதகம் பயன்படுகிறது. நிரம்பி வழியும் ஆசையில் மிதப்பவனுக்கு ஜோதிடம் பயன் தராது. தகுதி இல்லை என்றாலும், எப்படியாவது அந்த பலனைப் பெறுவதற்கு ஜாதகம் பயன்படாது.


நமது விருப்பத்தை நிறைவேற்ற ஜாதகம் பயன்படாது. குறைகளை அகற்றி நிறைவை எட்டி மகிழ்ச்சியைச் சுவைக்க ஜாதகம் பயன்படும். உலகவியல் சுகபோகங்களைச் சுவைத்து மகிழ ஜாதகத்தில் இடமில்லாத வேளையில், அதை எதிர்த்து பரிகாரம் வாயிலாக செயல்பட்டு வெற்றி பெறலாம் என்கிற பரிந்துரை மாயை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதப்பண்பில் உயர்ந்து, தேவனாக மாறி, உலகுக்குப் பயன்பட்டு நிறைவு பெறுவதுதான் ஜாதகத்தின் குறிக்கோள்.
- சிந்திப்போம்...

Saturday, November 12, 2016

வாழ்க்கை நெறியை கற்று தரும் திருமந்திரம்... திருமூலர் திருநட்சத்திர தின பகிர்வு


"ஒன்றே குலமும், ஒருவனே தேவன்..."என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமுதாயத்திற்கு வேண்டிய நல்லிணக்க செய்திகள் திருமந்திரத்தில் அழகாக விளக்கியவர் திருமூலர். ஆன்மிகம், மருத்துவம், விஞ்ஞானம், தத்துவம், உளவியல்  என திருமூலர் தொடாத துறைகளே இல்லை. திருமூலர் இயற்றிய மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திர பாடல்களே இதற்கு சான்றாகும்.

தேவர் குறளும், திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும், முனிமொழியும் - கோவை
திருவாசகமும், திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர் - இது ஔவையார் பாடல்.


திருக்குறள், நால்வேதங்கள், மூவரின் தேவாரம், மணிவாசகர் திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம் ஆகிய 11 நூல்களின் கருத்தும் மனிதரைப் புனிதம் ஆக்கும் ஒரே வழியையே காட்டுகின்றன என்று ஔவையார் பாடியுள்ளதே திருமந்திரத்தின் சிறப்புக்கு  சாட்சியாகும். திருமந்திரம் சைவ சமயத்திற்கு மட்டும் உரிய ஒரு சமய நூலாக அமையாது. உலக மக்களுக்கெல்லாம் அறத்தையும், ஆன்மிகத்தையும், மருத்துவத்தையும் எடுத்துரைக்கும் பொது நூலாக அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமந்திரம் ஆன்மிக வட்டத்திலேயே முடங்கி கிடக்கிறது. இதனை சமூகத்துக்கு பயன்பட வேண்டி, பலர் உரையெழுதியும், சொற்பொழிவாகவும் மக்களை சென்றடைய செய்கிறார்கள்.

அகத்தியர், போகர், கோரக்கர், கைலாசநாதர், சட்டைமுனி, திருமூலர், நந்தி, கூன்கண்ணர், கொங்கணர், மச்சமுனி, வாசமுனி, கூர்மமுனி, கமலமுனி, இடைக்காடர், புண்ணாக்கீசர், சுந்தரானந்தர், ரோமரிஷி மற்றும் பிரமமுனி ஆகிய 18 சித்தர்களில் இவர் ஒருவரே, நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். தவத்தால் ஞானம் பெற்ற சித்தர்கள் மவுனம் ஆகி விடுவார்கள். ஆனால் ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் உயர் நோக்கில், தான் பெற்ற ஞானத்தை நமக்கு அளித்து மகிழ்ந்தார் திருமூலர். அவருடைய வரலாறு அற்புதமானது. இவரது வரலாற்றை 28 பாடல்களில் பெரிய புராணத்தில் அழகாகப் பாடியுள்ளார் சேக்கிழார்.
வரலாறு
முழுமுதற்கடவுள் சிவபெருமான். இவரிடம் சிவஞான உபதேசம் பெற்ற நந்திபெருமானிடம் உபதேசம் பெற்றவர் சுந்தரநாதர். இவர் தான் அறிந்தது போக, மேலும் எண்வகை சித்திகளையும், யோகங் களையும் கற்கும் பொருட்டு, தமிழகத்தின் பொதிகை மலையில் வாழ்ந்த அகத்தியரைத் தரிசிக்க வந்தார். அந்த பயணத்தின்போது, வழியில் திருவாவடுதுறைக்கு அருகில் சாத்தனூரில் பசுமாடுகள் மேய்க்கும் ‘மூலன்’ என்பவன் இறந்து கிடந்தான். அதனால் கலங்கி நின்ற பசுக்களின் கண்ணீரைத் தாங்காத சுந்தரநாதர், ‘தன் உடலை மறைத்து, மூலன் உடலுக்குள் பரகாயப்பிரவேசம் செய்தார். பசுக்கள் மகிழ்வில் ஆனந்தக் கண்ணீர் விட்டன. மூலனின் மனைவி வீட்டுக்கு அழைத்தாள். ஆனால் திருவாவடுதுறை கோயிலில் போதிமர மாகிய அரசமரத்தின் கீழ், ஐம்புலனை அடக்கி தவநெறியில் யோகியாக அமர்ந்தார் மூலனாகிய சுந்தரநாதர். ‘தவராஜயோகி’ ஆகி மவுனம் காத்தார்.
ஒரு வருடம் தவமிருப்பார் திருமூலர். ஒரு பாடலைப் பாடுவார். மீண்டும் தவத்தில் மூழ்குவார். ஒருவருடம் முடிந்ததும் தவத்தால் தாம் பெற்ற அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடுவார். அப்படி மூவாயிரம் ஆண்டுகள் தவமியற்றி மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை அருளிச் செய்தார்கள் திருமூல நாயனார். மேலும்  ‘தன்னை நன்றாகத் தமிழ் செய்ய என்னை நன்றாக இறைவன் படைத்தான்’ என்று தன் வாழ்வின் நோக்கத்தை அறிவித்தார்.

முதல் மொழிபெயர்ப்பாளர்
சதாசிவன் வடமொழியில் 28 ஆகமங்களை உபதேசித்தார். அவற்றில் காலத்திற்கு தேவையான காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், காலோத்தரம், சுப்பிரபேதம், மகுடம், வியாமளம் என்னும் 9 வடமொழி ஆகமங்களை தமிழாக்கி எளிதாக்கித் தந்தார். இது பத்தாம் திருமுறையாக போற்றப்படுகிறது.

அன்பே சிவம்

திருமந்திரம் ஆகமத்தின் சாரமாக அமைந்திருந்தாலும் அனைவரும் அறியக்கூடிய எளிமையும், இனிமையும் உடைய பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.  ‘அன்பே சிவம்’ என்ற தொடரைப் பலரும் அறிவோம். மனிதர்கள் ஏனைய மனிதர்கள்பால் செலுத்தும் அன்பில்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் தோன்றிய கடவுள் சார்புடைய மதங்களும், கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட அன்பினைப் பெரிதும் போற்றியே உரைக்கின்றன. இதைதான் நீங்கள் பிறர் மீது அன்பு செலுத்தினால் இறைவன் உங்கள் மேல் அன்பு செலுத்துவார் என்று திருமூலரும் வலியுறுத்தியுள்ளார்.

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
- திருமந்திரம் 270


உள்ளமே கோயில்
இறைவனை அறிவதற்கும் அடைவதற்கும் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அக வழிபாடு, மற்றொன்று புற வழிபாடு. இதில் அக வழிபாடு தியானம் அதாவது தவம், அதேபோல புற வழிபாடு பூஜை, தொண்டு ஆகியவைதான். உள்ளம் பெருங்கோயில் எனக்கூறிய ஆன்ம நேய அருட்கவி திருமூலர். கடவுள் வெளியே இல்லை உன் உள்ளேயும் இருக்கிறார் என்பது தான் கடவுள் பற்றிய இவரது ஒற்றை வரி கண்டுபிடிப்பாகும்.  இதைதான் அகம்பிரம்மா என்று வேதம் கூறுகிறது. எனவே உள்ளத்தில் அன்பு இல்லாமல் கூடைகூடையாய் கோயிலுக்கு லட்சார்ச்சனை செய்வதை விட, உள்ளன்போடு கடவுளை வணங்கினால் போதுமானது என்கிறார்.

அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என்போன் மணியினை எய்த ஒண்ணாதே - திருமந்திரம் 272


கோயிலுக்குச் செல்வது, பூஜை செய்வது, மந்திரம் சொல்வது, படையல் வைப்பது போன்றவையெல்லாம் முக்கியம்தான். ஆனால் அவற்றையெல்லாம்விட, உண்மையான அன்பு வேண்டும். அதனால் உங்கள் உள்மனம் குழைந்து அவனை வணங்கிச் சரணடைய வேண்டும். அப்போதுதான் ஒப்பற்ற மணியாகிய அவனது திருவருள் உங்களுக்குக் கிடைக்கும்.

அதேபோல விண்வெளியையும், கோள்களையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முறையில் முதலில் தன்னை யார் என்பதை அறிந்த கொள்ள யாரும் முற்படுவதில்லை. எனவே முதலில் உன்னை நீயே அறிந்துகொள்,  அப்படி அறிந்துகொண்டால்,  அனைத்தும் அறியலாம் என்கிறார் திருமூலர்.

என்னை அறிந்திலேன்
இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும்
அறிந்திலேன்   - திருமந்திரம் 2366


ஆன்மிக விஞ்ஞானி
ஆன்மிகமும் அறிவியலும் வேறன்று, இரண்டும் ஒன்றென்றார். ஆன்மிகத்தால் தான் பெற்ற அறிவியல் கருத்துக்களை விதைத்தார்.
குறிப்பாக மருத்துவ அறிவியலுக்கு முன்னோட்டமாக, பல வியத்தகு அறிவியல் அற்புதங்களை விளக்குவதாக உள்ளன. திருமந்திரம் இரண்டாம் தந்திரத்தில் ‘கரு உற்பத்தி’ எனும் தலைப்பில் உள்ள 41 பாடல்களை  இன்றைய மகப்பேறு குறித்தும் பாடியுள்ளார்.
சேர்க்கையின்போது, பெண் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் குழந்தை மந்தனாகப் பிறக்கும். சிறுநீர் தேங்கியிருந்தால், ஊமைக் குழந்தையும், இரண்டுமே இருந்தால் குழந்தை குருடாகவும் பிறக்கும் என்று 481-ஆம் பாடலில் சொல்கிறார் திருமூலர். எனவே சேர்க்கைபோது தூய்மையுடனும், உயர் எண்ணங்களுடனும் தம்பதிகள் இருந்தால் நல்ல பிள்ளை உருவாகும் என்கிறார்.

எல்லா உயிர்களையும் நேசி

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது
        ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே

- திருமந்திரம் 252

எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும். பசுவுக்குப் புல் தருவது, ஏழைக்கு ஒரு கவளம் உணவு தருவது, துன்பத்தில் உள்ளவருக்கு ஆறுதல் சொல்வது, பெற்றோரைக் காப்பது, மற்றவருக்கு உதவுவது ஆகியன தர்மங்கள் என்கிறது திருமந்திரம்.
ஆக, நாம் திருமந்திரம் காட்டும் வழிப்படி தர்மங்கள் செய்வோம்;  பொல்லாப் பிணியும், சொல்லொணா துயரங்களும் இல்லாத வாழ்வை பெற்று மகிழ்வோம்.

ஆற்றரு நோய்மிக்கு,
      அவனிமழை இன்றிப்
போற்ற அருமன்னரும்   
      போர்வலிகுன்றுவர்
கூற்று உதைத்தான்
        திருக்கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில்தானே
- திருமந்திரம் 517


சிவாலயங்களில் பூசைகள் குறைந்தால் நோய் மிகும், மழை குறையும், மன்னர் கெடுவர் என்கிறார் திருமூலர். திருக்கோயிலை முன்னோர்கள் பக்தியுடன் கட்டினர். அதற்கு பலகோடி சொத்துக்களையும் தந்தனர். ஆனால் அந்தச் சொத்துகளை இன்றைய மக்கள் அபகரித்து வாழ்கிறார்கள். கோயில்களை வியாபார நோக்கில் செயல்படும் மையங்களாக மாற்றி வருகிறார்கள். அதனால்தான் வளம் குன்றி மழையை இழந்தோம்; துயரங்களை அனுபவிக்கிறோம்.
அதேபோல மனிதன் இயற்கையை கடவுளாக வணங்கியவரை அதுவும் இயல்பாக உதவியது. இன்று இயற்கையை அழித்து, மாசுபடுத்துவதால் இயற்கை பேரிடர்கள் உருவாகின்றன. எனவே  ஆலய பூசைகளை முறைப்படி செய்வோம்; மழை பெறுவோம்!

திருமூலர்  காட்டும் வழி
நம்மால் ஞானியர் போன்று பாவபுண்ணியங்களைக் கடக்க இயலா விட்டாலும், பாவங்கள் செய்வதையாவது தவிர்ப்போம். இயன்றவரையிலும் தான-தருமங்கள் செய்து, ஞானநூல்கள் காட்டும் அறவழியில் வாழ்வோம். அப்போது நம் மனவளமும் வாழ்க்கையும் சிறக்கும்.
நவம்பர் 13,  திருமூலர் நினைவு தினம்.

Temple 28 - Palani Temple - பழநிமலையில் இருப்பது முருகனா? தண்டாயுதபாணியா?


போகரின் உபாசனா தெய்வமான புவனேஸ்வரியின் அறிவுரைப்படி போகர், பழநிமலையில் தவம் இருந்தார். அவரது தவத்துக்கு இரங்கிய பழநி ஆண்டவர், தன்னை பிரதிஷ்டை செய்யும் முறை மற்றும் வழிபாடுகள் குறித்துச் சொல்லிவிட்டு மறைந்தார். அதன்படி, தண்டாயுதபாணி வடிவை உருவாக்கி, ஆகம விதிப்படி கர்ப்பக்கிரகத்துக்குள் பிரதிஷ்டை செய்தார் போகர்.

போகரின் சீடர் புலிப்பாணிச் சித்தரும், அவரது வழிவந்த பண்டாரப் பெருமக்களும் தண்டாயுத பாணியைப் பராமரித்து வந்தனர்.
போகருக்குப் பழநி கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது. போகரின் சீடர் புலிப்பாணி முனிவருக்கு ஒரு மடம் உள்ளது. இவரின் சந்ததியினருக்கு கோயிலில் பூஜை செய்யும் உரிமையும், விஜய தசமி அன்று அம்பு போடும் உரிமையும் இருந்து வருகிறது.
ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் போகரின் சமாதி உள்ளது. அதில், அவர் வழிபட்டதாகக் கருதப்படும் புவனேஸ்வரியின்  திருவுருவமும், மந்திரச் சக்கரங்களும், மரகதலிங்கமும்  உள்ளன. இவற்றுக்குத் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.

நவபாஷாணத்தினாலான மூலவர் விக்கிரகத்தை அபிஷேகிக்கும்போது, மேலிருந்து கீழாகவே தேய்ப்பர். இந்த விக்கிரகத்தின் மேற்பரப்பு கீழ்நோக்கிய நிலையில் செதில் செதிலாக உள்ளதே அதற்குக் காரணம். மேல் நோக்கித் தேய்த்தால் கைகள் ரணமாகும்.
தினமும் இரவில் முருகப்பெருமான்  மேனி முழுவதும் சந்தனம் பூசுகின்றனர். மறுநாள் காலையில் இது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தச் சந்தனத்தை, தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால், பிணிகள் நீங்கும் என்பது ஐதீகம். இவ்வாறு இரவில் திருக்காப்பிட்ட பின், மறு நாள் காலையில் பார்க்கும்போது, இறைவனின் மேனி வியர்த்திருக்கும். அதைத் துணியால் ஒற்றி எடுத்துப் பிழிந்து, தீர்த்தமாக வழங்குகின்றனர்.

தண்டாயுதபாணி, மொட்டை அடித்த ஆண்டி அல்ல. அபிஷேகத்தின்போது கவனித்தால், அவர் சடைமுடியுடன் காட்சி தருவதைக் காணலாம்.
காலை பூஜையின்போது  தண்டாயுதபாணி ஈஸ்வரனை வழிபடுவதாக ஐதீகம். அப்போது, காவி உடையில் வைதீக கோலத்தில் தண்டாயுதபாணியை அலங்கரிப்பார்கள். காலச் சந்தியில் குழந்தை வடிவ திருக்கோலம்; உச்சிக் காலத்தில் கிரீடத்தோடு கூடிய வைதீக அலங்காரம்; சாயரட்சையில் ராஜ அலங்காரம்; ராக்காலத்தில் முதிய வடிவம்.
மூல விக்கிரகத்துக்குச் செய்யப்படும் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு அபிஷேகம் சிறப்பான ஒன்று. ஒவ்வொரு அபிஷேகத்துக்குப் பிறகும் தண்டாயுதபாணி வெவ்வேறு அலங்காரங்களில் காட்சி தருவார். அவை: ராஜ அலங்காரம், வேடன், சந்தனக் காப்பு, பாலசுப்பிரமணியர், விபூதிக் காப்பு அதாவது ஆண்டிக் கோலம். ஒரு காலத்தில் செய்து வந்த பெண் அலங்காரம், தற்போது செய்யப்படுவது இல்லை.



மூலவருக்கு அருகில் சிறிய பேழை ஒன்று உள்ளது. அதில் சாளக்கிராம ஸ்படிகலிங்க ரூபத்தில் சிவபெருமானும், உமாதேவியும் இருக்கின்றனர். இவர்களை தண்டாயுதபாணி பூஜிப்பதாக ஐதீகம்.
இங்கு பள்ளியறை உற்சவம் விசேஷம். அப்போது வெள்ளிப் பல்லக்கு ஒன்று சந்நிதிக்கு வருகிறது. ஓதுவார்களும், கட்டியக்காரர்களும் இறைவனின் புகழ் பாட, மூலஸ்தானத்திலிருந்து சுவாமி பாதுகைகள் பல்லக்கில் வைக்கப்பட்டு ஊர்வலமாக வருகின்றன. (வெள்ளி, திங்கள் மற்றும் கிருத்திகை ஆகிய நாட்களில் தங்கப் பல்லக்கு வரும்) அப்போது, கொப்பரைத் தேங்காய்- ஏலக்காய்- சர்க்கரை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. பிறகு, பல்லக்கு பள்ளியறைக்கு வந்து சேரும். அங்கு பாதுகைகள், பல்லக்கில் இருந்து தொட்டில் போன்ற மஞ்சத்துக்கு மாற்றப்படுகின்றன. கடைசியாக, அன்றைய வரவு-செலவு கணக்குகளை படித்துக் காட்டுவர். இறுதியில் நடை சாத்தப்படுகிறது.

மூலவர் சந்நிதி, வழக்கமாக காலை 6 முதல் இரவு 8 மணி வரையிலும், கார்த்திகை மற்றும் திருவிழா நாட்களில் காலை 4 முதல் இரவு ராக்கால பூஜை முடியும் வரையிலும் திறந்திருக்கும். இங்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
பழநியில் பக்தர்களது காவடிப் பிரார்த்தனை பிரசித்தம்.

பழநியின் தனிச்சிறப்பு பஞ்சாமிர்தம். மலை வாழைப்பழம், நெய், தேன், நாட்டுச் சர்க்கரை, கற்கண்டு ஆகியவற்றின் கலவை இது. இதை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யும்போது பாஷாண சக்தியால் மருத்துவ குணம் பெறுகிறது.
‘போகர் வடித்த தெய்வச் சிலை முருகப் பெருமான் அல்ல; தண்டாயுதபாணிதான். தேவஸ்தானத்தின் பெயரும் தண்டபாணிதான். ரசீதுகள், விடுதிகள் மற்றும் கோயில் சொத்துகள் எல்லாவற்றிலும் தண்டாயுதபாணி என்றே பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
போகரால் செய்யப்பட்ட சிலையில் வேல் இல்லை; தண்டமே உள்ளது. உற்சவர் கையில் வேலும் தண்டமும் மயிலும் இல்லை. அடிவாரத்தில் உள்ள குழந்தை வேலாயுதசாமியே மயில் வாகனத்தில் வேலுடன் காட்சி தருகிறார்.


Temple 14 Sri Subrahmanya Swamy Thirukovil, Tiruchendur - 4

திருவிழாவின்போது ஒரு நாள் ‘தங்க ஆடு’ வாகனத்தில் அஜாரூடராகக் காட்சி தருகிறார் செந்திலாண்டவர். ஆறுமுகப் பெருமானின் உற்சவர்- குமாரவிடங்க பெருமான். திருமணங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் 'மாப்பிள்ளைச் சாமி' எனப்படுகிறார்.

ஆறுமுகப் பெருமானின் ஆறுமுகங்களுக்கும் நடைபெறும் ஆறுமுக அர்ச்சனை சிறப்பானது. ஆறு பண்டிதர்கள் முருகனின் ஆறுமுகங்களின் முன் நின்று திருநாமங்களைப் பாட, சிவாச்சார்யர்கள் 6 பேர் மலர் தூவி அர்ச்சனை செய்வதுதான் ஆறுமுகார்ச்சனை எனப்படுகிறது. அப்போது ஆறு திருமுகங்களுக்கும், ஆறு வகையான உணவு படைக்கப்படுகிறது. ஆறு தட்டுகளில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்படும்.

முருகனின் ஆறுமுகங்களும் ஆறு விதமான செயல்களைச் செய்வதாக ஐதீகம். உலகுக்கு ஒளி தருவது ஒரு முகம், வேள்விகளைக் காப்பது இன்னொரு முகம், அடியார் குறை தீர்ப்பது மற்றொரு முகம், வேதாகமப் பொருளை விளக்குவது பிறிதொரு முகம், பகைவனையும், தீயோனையும் அழிப்பது வேறொரு முகம். தேவியருக்கு மகிழ்ச்சி தருவது ஆறாவது முகம். இவரது ஆறுமுகங்களும் முறையே சஷ்டி கோலம் கொண்ட முருகன், பிரம்மன், விஷ்ணு, சிவன், கலைமகள், மகாலட்சுமி ஆகியோரைக் குறிக்கும் என்பார்கள்.

அசுரனை வதம் செய்ததால், திருத்தணி மற்றும் பழநி தலங்களில் உள்ளது போல் க்ஷத்திரிய வடிவில் முருகன் இங்கு காட்சி தருகிறார். எனவே, மேற்குறிப்பிட்ட தலங்களில் தோஷ பரிகாரமாக நடைபெறும் ‘சேவல் விடும்’ நேர்த்திக் கடன் இங்கும் நடைபெறுகிறது.

தலத்தின் சிறப்பம்சம் இலை விபூதி பிரசாதம். செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங்களாக உள்ளனர் என்பது ஐதீகம். பன்னீர் மர இலைகளில் வைத்துத் தரப்படுவதே இலை விபூதி பிரசாதம். முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்க திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது. சூரபதுமன் வதம் முடிந்த பின் முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்றும் கூறுவர்.
  

Temple 14 Sri Subrahmanya Swamy Thirukovil, Tiruchendur - 3

திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவர் கோயில் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. கோயில் வடக்கு- தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு- மேற்காக 214 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. இதன் பிரதான வாயில் தெற்கு நோக்கி இருக்கிறது.

 கோபுரம், யாளி மண்டபத்துக்கு மேல் 137 அடி உயரமும், 90 அடி நீளமும், 65 அடி அகலத்துடனும் திகழ்கின்றது. இதன் ஒன்பதாவது மாடத்தில் கடிகார மாளிகை இருக்கிறது. மேற்கு ராஜகோபுரம், தெய்வானை திருமணம் நடைபெறும்போது மட்டும் திறக்கப்படும்.



முதல் பிராகாரத்தில் தெற்கில் 'ஜெயந்திநாதர்' எனப்படும் குமாரவிடங்கப் பெருமான் வள்ளி- தெய்வானையுடன் காட்சி தருகிறார். தென்மேற்கில் வள்ளிக்கும், வடமேற்கில் தெய்வானைக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன.

மேற்கில் சங்கரநாராயணர், காசி விசுவநாதர்- விசாலாட்சி, வேதபுரீஸ்வரர், திருவாதபுரீஸ்வரர், நாகநாத சோமேஸ்வரர் ஆகியோரது சந்நிதிகள் உள்ளன. வடக்கில் மாணிக்கவாசகர், காரைக்காலம்மையார், சிவகாமி- நடராஜர், சனீஸ்வரர், பைரவர் சந்நிதிகள் இடம் பெற்றுள்ளன. தவிர, இங்கு ஏழுமலையானுக்கும், சந்தான கிருஷ்ணனுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

இரண்டாம் பிராகாரத்தின் மேற்கில் ஸித்தி விநாயகர், சகஸ்ரலிங்கம், ஆன்மநாதர், மனோன்மணி அம்மை, பானுகேஸ்வரர், சோமசுந்தரர், மீனாட்சியம்மை, திருமூலநாதர், திருக்காளத்தி நாதர் (வாயு லிங்கம்), உமா மகேஸ்வரி, அருணாசலேசுவரர் (தேயு லிங்கம்), உண்ணாமுலையம்மை, ஜம்புகேசுவரர் (அப்பு லிங்கம்), வன்மீக நாதர் (பிருதிவி லிங்கம்), அருணகிரிநாதர், வல்லப கணபதி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இதன் தென்பகுதியில், முதல் பிராகாரம் செல்லும் வாசலில் வீரகேசரியும், வீர மார்த்தாண்டரும் காவல் புரிகின்றனர். இங்கு, நவகிரகங்கள் கிடையாது. ஆனால், சனி பகவானுக்குத் தனிச் சந்நிதி உண்டு.

இந்தத் தலத்தை வீரபாகு க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள். அர்த்த மண்டபத்தில் வீரபாகு, வீர மகேந்திரர் காவல் தெய்வங்களாக விளங்குகின்றனர். செந்திலாண்டவனுக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்கு பூஜை செய்து ‘பிட்டு’ படைத்து வழிபடுகின்றனர்.
ஸ்ரீசெந்திலாண்டவர் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகருக்கு, சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே, அவர் கையில் வேலும், அருகில் தேவியரும் இல்லை.

கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும், கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய- சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்குகிறார் என்பதை விளக்குவதற்காகவே!

முருகன் சந்நிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங்களைக் கண்ணாலும், மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போதுதான் நமது பிரார்த்தனை முற்றுப்பெறும். அஷ்ட லிங்கங்கங்களில், பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடக்காது. ஏனெனில், முருகப்பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.

திருச்செந்தூரில் முருகப் பெருமான் ஐம்பெரும் தெய்வமாக வணங்கப்படுகிறார். அவருக்கு மஞ்சள் பட்டாடை- மஞ்சள் மலர் மாலை அணிவித்து நான்முகனாகவும், நீல மலர்கள்- நீல வண்ண ஆடைகளை அணிவித்து திருமாலாகவும், சிவப்பு நிற ஆடைகள்- சிவப்பு மலர்களை அணிவித்து அரனாகவும், வெண்பட்டு- வெண் மலர்களால் அலங்கரித்து மகேஸ்வரனாகவும், பச்சை சார்த்தி சதாசிவனாகவும் போற்றப்படுகிறார். இங்கு நாள்தோறும் ஒன்பது கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. மார்கழி மாதம் மட்டும் பத்து கால பூஜை நடைபெறுகிறது.

மூலவருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியங்களில் காரம், புளி உண்டு. பருப்புக் கஞ்சி, தோசை, தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியவை இடம் பெறுகின்றன. உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசை, சிறுபருப்புக் கஞ்சி ஆகியவை நைவேத்தியத்தில் இடம் பெறுகின்றன. இரவு நேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியன நிவேதிக்கப்படுகின்றன.

மூலவரின் தலைக்கு மேல் பெரிய வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டு, அதில் பால் நிரப்பி, சிறு துவாரத்தின் வழியாக பாலை தாரை தாரையாக மூலவரின் மேல் விழச் செய்து சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் இந்தக் கோயிலின் சிறப்பு.

மூலவரின் உற்சவர்- அலைவாய் உகந்த பெருமான். ஐம்பொன் திருமேனி. நவராத்திரி நாள்களில்- பரிவேட்டை, சிறுத்தொண்டர் திருநாள், தைப் புனர்பூசம், பூசம் ஆகிய நாட்களில் இவர் எழுந்தருளுகிறார். இவரை 'தோழன்சாமி' என்பார்கள். வள்ளி- தெய்வானை இவருக்கு அருகில் உள்ளனர். திருவிழாக்களின்போது சந்திகளில் உலா வருவதால், இவர் சந்திச்சாமி என்றும் அழைக்கப்படுகிறார்.

இரவு சுமார் 9:45 மணிக்கு சுவாமிக்குத் திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு, ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்துத் தீபாராதனை செய்வர். இதை ரகசியத் தீபாராதனை என்கிறார்கள்.