Sunday, March 19, 2017

What is the meaning of BUDDHA Statues?

சிரிக்கும் புத்தர்:
லாஃபிங் புத்தர்  என்னும் சிரிக்கும் புத்தர் சிலை வடிவங்களை பெரிய ஷாப்பிங் மால்களில் பார்த்திருப்போம். இந்த சிரிக்கும் புத்தர் சிலை மகிழ்ச்சி, செல்வம் மற்றும் மங்களகரமான செயல்களின் குறியீடாகப் பார்க்கப்படுகின்றது.

நம்முடைய வீட்டுக்கு சிரிக்கும் புத்தர் சிலையை வாங்கி வந்தோம் என்றால், அதை ஒருபோதும் தரையில் வைக்கக்கூடாது. அப்படிச் செய்வது அவரை அவமதிக்கும் செயலாகும்.  வீட்டுக்குள் நம் கண்பார்வைக்குத் தெரியுமாறு உள்ள உயர்த்தில் வைத்து அவருக்கு மரியாதை செய்யவேண்டும்.

ஆண்டுதோறும் மே மாதம் அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. சிரிக்கும் புத்தரின் முன்பு மெழுகுவத்தியை  ஏற்றி தியானித்தால் நாம் வேண்டும் வரங்களை நமக்கு அவர் அளிப்பார்.

தங்கபீடத்திலிருக்கும் சிரிக்கும் புத்தர்:
தங்கபீடத்தின் மீது உட்கார்ந்த நிலையில் சிரிக்கும் புத்தர் சிலை, செல்வ வளத்துக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் சிறந்த அடையாளமாகத் திகழ்கின்றது. பீடம் எவ்வளவு பெரியதாக இருக்கின்றதோ அதற்கேற்ப அவரது ஆசியும் செல்வ வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குழந்தைகளுடன் விளையாடும் புத்தர்:
குழந்தைகளுடன் விளையாடும் புத்தர் குதூகலத்தின் சின்னம். சொர்க்கத்திலிருந்து வரும் அதிர்ஷ்டத்தை அப்படியே நம் இல்லத்துக்கு கடத்தித் தருபவர். குழந்தைப் பாக்கியம் இல்லாமல் தவிப்பவர்கள் இந்த புத்தரை வீட்டில் வைத்து வழிபட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

கைகளைத் தூக்கிய புத்தர்:
தலைக்குமேல் இரண்டு கைகளையும் தூக்கி, தங்கக் கட்டிகளை சுமந்தபடி இருக்கும் புத்தரை வர்த்தக நிறுவனங்களில் வைத்து வழிபட்டால், செல்வ வளம் பெருகுவதுடன் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வாக்குமிக்க நபராகவும் மாறுவார்.
தலைக்குமேல் கைகளை தூக்கிய நிலையில் ஆசீர்வதிக்கும் புத்தர் மக்கள் அனைவரது மகிழ்ச்சியின் அடையாளம்.
கோணிப்பை நிறைய  தங்கத்துடன் இருக்கும் புத்தர்:
தோளில் கோணிப்பை நிறைய தங்கத்தை சுமந்தபடி இருக்கும் புத்தர் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்த்து, வெற்றிக்கு  வழி வகுப்பார்.
அவர் மனிதர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவராக இருக்கிறார்.
புத்தரின் தோளில் தொங்கும் பை ரகசியப் பை என்பது சீனர்களின் நம்பிக்கை. அதில் மனிதனின் சகலவிதமான பிரச்னைகளுக்கும் தீர்வு இருப்பதாக நம்புகின்றார்கள்.

ஃபெங்ஷுய் என்னும் கலை

இந்தியாவுக்கும் சீனாவுக்குமான கலாசாரத் தொடர்புகள் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகின்றது. நம்முடைய அநேக விஷயங்களை அவர்கள் ஃபாலோ செய்வதும் அவர்களுடைய நிறைய விஷயங்களை நாம் ஃபாலோ செய்வதும் இப்போதும் நடந்து கொண்டுதானிருக்கின்றது.

எல்லோருமே வளமான வாழ்க்கையைத்தான் வாழ விரும்புகின்றனர். மக்களின் வளமான வாழ்வுக்கு ஃபெங்ஷுய் என்னும் கலை முக்கிய பங்கை ஆற்றி வருகின்றது. 

ஆசிய நாடுகள் பலவற்றில் பின்பற்றப்பட்ட மக்களின் வெற்றியும் மகிழ்ச்சியும் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தன. ஃபெங்ஷுய், புராதனக் கலை என்பதையும் அந்நாட்டு அரசர்கள் பயன்படுத்தி, மகிழ்ச்சியோடு வாழ்ந்ததையும் அறிந்து பலரும் பின்பற்றுகின்றனர்.

பெங்ஷூய், சீனாவில் தோன்றிய அறிவியல் கலை.
மண்ணுலக உயிர்களுக்கு முக்கிய தேவை காற்றும் நீரும்தான்.

  • 'பெங்' என்றால் காற்று 
  • 'ஷுய்' என்றால் நீர் என்று பொருள். 


ஃபெங்ஷுய் கலையைப் பயன்படுத்தி, நமது வாழ்க்கையின் முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும்  நம்மால் ஏற்படுத்திக்கொள்ளமுடியும்.
சுற்றுப்புறச்சூழல்கள், நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி நினைக்கவோ, சிந்திக்கவோ இப்போதுள்ள அவசர உலகத்தில் நேரமில்லை. ஃபெங்ஷுய் மூலம் தீய சக்திகளை விரட்டி, நல்ல சக்திகளையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் அமைத்துக்கொள்ளலாம்.



ஃபெங்ஷுய் கலையானது, உலகம் முழுவதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளில் சின்னச்சின்ன மாற்றங்களை ஏற்படுத்தி, பெரிய  அளவில் பயன் அடைந்துள்ளனர்.  

Saturday, March 4, 2017

எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்?

உலக அனைத்துக்கும் ஆதார சக்தியாக திகழ்பவள் ஆதிபராசக்தி. ஆதிபராசக்தியிடமிருந்துதான் மும்மூர்த்திகளும் தோன்றினர். அன்னை ஆதிபராசக்தி உலக மக்களுக்கு அருள்புரிவதற்காகவே பல வடிவங்களும், பல பெயர்கள் கொண்டு கோயில் கொண்டிருக்கிறார்.  புண்ணிய பூமியான நம் நாட்டில் எண்ணற்ற அம்மன் திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன.  இதில் எந்த அம்மனை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்...

மதுரை மீனாட்சி அம்மன்
மதுரையில் ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மன் வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். திருமணத் தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் வேண்டிய வரமெல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

காஞ்சி காமாட்சி அம்மன்


அன்னை காமாட்சி நம்முடைய விருப்பங்களை எல்லாம் பூர்த்தி செய்பவள். காமாட்சி அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி, மகிழ்ச்சி ஏற்படும். இந்த அம்மனுக்கு விருச்சிப்பூவால் மாலை கட்டி வணங்கிவிட்டு வந்தால் சகல நலன்களும் உண்டாகும்.

இருக்கன்குடி மாரியம்மன் 



விருதுநகர் மாவட்டம்  இருக்கன்குடியில் உள்ள மாரியம்மனை வழிபட்டால், தீராத வயிற்று வலி, கை, கால் வலி ஆகியவை குணமாகும். கண் நோய் உள்ளோர்கள் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் கண்களைக் கழுவ நோய் நீங்குகிறது என்பதும் நம்பிக்கை.

சமயபுரம் மாரியம்மன்


திருச்சிராப்பள்ளியிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். ஆதிபராசக்தியாக இருக்கும் சமயபுரம் மாரியம்மனுக்கு, 'மகமாயி・என்ற இன்னொரு பெயரும் உண்டு. இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோயில் வளாகத்தில், காலையில் புனித நீராடி அம்மனை வழிபட்டுச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.

வெக்காளி அம்மன்


வெக்காளி அம்மன், பக்தியுடன் வேண்டுவோரது குறைகளைத் தீர்ப்பவள்; தீயவர்களிடம் வெம்மை காட்டி அவர்களை அழிப்பவள்; பக்தர்களிடம் தாய்க்குத் தாயாக, சேய்க்கு சேயாக இருப்பவள்; வெக்காளி அம்மனை வெள்ளிக்கிழமைகளில்  மனதார வழிபட்டு, அர்ச்சனை செய்தால் குடும்ப ஒற்றுமை, குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

வாராஹி அம்மன்

வாராஹி  அம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் பஞ்சனி திதிகளில் விரலி மஞ்சள் மாலையை சமர்பித்து, அர்ச்சனை செய்தால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. வாராஹியை 16 முறை வலம் வந்து நெய்தீபம் ஏற்றி, முழுமனதோடு வழிபட்டால் எல்லா வகையிலும் வெற்றிகிட்டும்

துர்கை அம்மன்

துர்கை என்பவள் துக்கம் தீர்ப்பவள். ராகுகால பூஜைக்கு உரியவள்.  ஒருவருக்கு ராகு தசையோ அல்லது ராகு புத்தியோ நடைபெறும்போது, துர்கைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், ராகுவினால் ஏற்படக்கூடிய அசுப பலன்கள் நீங்கிவிடுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.